மோடியின் 'எருமை' 'தாலி' 'இடஒதுக்கீடு' பறிப்பு பேச்சு.. ராகுல் காந்தி சரமாரி தொடர் பதிலடி!
டெல்லி: லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தாலியை பறிக்கும்; வீட்டைப் பறிக்கும்; எருமைகளைப் பறிக்கும் என தொடர்ச்சியாக முன்வைத்து வரும் விமர்சனங்களுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது சமூக வலைதளப் பக்கங்களில் சரமாரியான பதிலடி கொடுத்துள்ளார்.
ராகுல் காந்தி தமது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: இடஒதுக்கீட்டை நீக்கும் நரேந்திர மோடியின் பிரச்சாரத்தின் தாரக மந்திரம் - மூங்கில் இல்லை என்றால் புல்லாங்குழல் இசைக்காது, அதாவது அரசு வேலையும் கிடைக்காது, இடஒதுக்கீடும் கிடைக்காது.

இடஒதுக்கீடு பறிப்பு: 'கண்ணை மூடிக்கொண்டு தனியார்மயமாக்கல்' செய்வதன் மூலம் அரசு வேலைகளை ஒழித்துவிட்டு, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டை பாஜக அரசு ரகசியமாகப் பறித்து வருகிறது. 2013ல் பொதுத்துறையில் 14 லட்சம் நிரந்தரப் பணியிடங்கள் இருந்த நிலையில், 2023ல் 8.4 லட்சமாக மட்டுமே இருந்தது. BSNL, SAIL, BHEL போன்ற உயர்மட்ட பொதுத்துறை நிறுவனங்களை அழித்ததன் மூலம், பொதுத் துறையில் மட்டும் கிட்டத்தட்ட 6 லட்சம் நிரந்தர வேலைகள் நீக்கப்பட்டன - இவை இட ஒதுக்கீட்டின் பலனைப் பெற்றிருக்கும். ரயில்வே போன்ற நிறுவனங்களில் காண்டிராக்டில் அரசு வேலை கொடுத்து பின்வாசல் வழியாக அகற்றப்படும் வேலைகளுக்குக் கணக்கே இல்லை.
காலி பணியிடம் நிரப்புவோம்: மோடி மாடல் 'தனியார்மயமாக்கல்' என்பது நாட்டின் வளங்களை கொள்ளையடிப்பது, இதன் மூலம் தாழ்த்தப்பட்டவர்களின் இடஒதுக்கீடு பறிக்கப்படுகிறது. 30 லட்சம் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்புவதன் மூலம், பொதுத் துறைகளை வலுப்படுத்தி, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் வேலைவாய்ப்புக்கான கதவுகளைத் திறப்போம் - இது காங்கிரஸ் உத்தரவாதம்.
மோடியின் விரக்தி பேச்சு: விரக்தியடைந்த, ஏமாற்றமடைந்த மற்றும் தோல்வியடைந்த பிரதமரின் வார்த்தைகளைக் கேளுங்கள்: "உங்கள் வீட்டில் உள்ள அறையை காங்கிரஸ் பறித்துவிடும்" "உங்கள் கழுத்தில் உள்ள தாலியை காங்கிரஸ் பறிக்கும்" "காங்கிரஸ் உங்கள் எருமையை எடுத்துச் செல்லும்":

பொய் இயந்திரமாகிப் போன மோடி: பாஜகவின் 300 இடங்களில் 150க்கும் மேற்பட்ட இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது என்பதற்காகவே நரேந்திர மோடி இதுபோன்ற அபத்தமான, பொய்யான விஷயங்களைச் சொல்கிறார். இந்த அச்சத்தால், பிரதமர் என்ற கண்ணியத்தை மறந்து, 'பொய் இயந்திரமாக' மோடி மாறிவிட்டார்.
அதானி ஆட்சியாக இருக்காது: இந்திய அரசு பொதுமக்களிடம் இருந்து எடுக்காது, மோடி தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு வீணடித்த அதே தொகையை மக்களுக்கு கொடுக்கும். எங்கள் அரசாங்கம் அதானிகளின் ஆட்சியாக இருக்காது, இந்தியர்களின் ஆட்சியாக இருக்கும். இவ்வாறு ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications