புதிய ராணுவ தலைமை தளபதியாக எம்.எம். நரவனே நியமனம்- சென்னை பல்கலை.யில் முதுகலை படித்தவர்!
டெல்லி: நாட்டின் புதிய ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ராணுவ தளபதி நரவனே, சென்னை பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பு தொடர்பாக முதுகலை பட்டம் படித்தவர்.
தற்போதைய ராணுவ தலைமை பிபின் ராவத்தின் பதவி காலம் வரும் 31-ந் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து புதிய தளபதியாக எம்.எம். நரவனே நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள நரவனே, தற்போது கிழக்கு பிராந்திய தளபதியாக இருக்கிறார். மகாராஷ்டிராவின் புனேவின் பள்ளி படிப்படை முடித்தார் நரவனே.
புனே தேசிய பாதுகாப்பு அகாடமி, டேராடூன் இந்திய ராணுவ அகாடமியிலும் சென்னை பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பு தொடர்பாக முதுகலை பட்டமும் படித்தவர். 1980-ம் ஆண்டு 7-வது சீக்கியர் படைப்பிரிவில் இணைந்தார்.
கர்நாடகாவில் பகீர்.. பாபர் மசூதி இடிப்பு காட்சியை நடித்து காட்டிய பள்ளி மாணவர்கள்!
வடகிழக்கு மாற்றும் காஷ்மீரில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர், 2017-ம் ஆண்டு குடியரசு தின ராணுவ அணிவகுப்பின் தளபதியாகவும் பணியாற்றியவர் நரவனே.
கடந்த செப்டம்பர் 1-ந் தேதி ராணுவ துணை தளபதியாக நியமிக்கப்பட்டார். அவரது மனைவி வீணா, 25 ஆண்டுகாலம் ஆசிரியராக பணியாற்றியவர்.