Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கும்பமேளா: 40 பேர் பலியான மரண ஓலத்துக்கு நடுவே ஹெலிகாப்டரில் பூமழை தூவி புனித நீராடிய 'சாது'க்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் தை அமாவாசையை முன்னிட்டு பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் புனித நீராடிய போது நெரிசலில் சிக்கி 40-க்கும் மேற்பட்டோர் பலியாகிய துயரம் நிகழ்ந்துள்ளது. இந்த துயரத்தின் மரண ஓலம் ஓய்வதற்குள்ளாகவே மகா கும்பமேளா நடைபெறும்
திரிவேணி சங்கமத்தில் சாதுக்கள் மற்றும் சங்கராச்சாரியார்கள், ஹெலிகாப்டரில் பூமழை தூவ புனித நீராடியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்கின்றனர் பக்தர்கள்.

மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வட இந்தியாவின் புனித நதிக்கரைகளில் நடைபெறும்; கும்பமேளா என்பது 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.

maha kumbh mela 2025

தற்போது உ.பி. பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்த கும்பமேளாவில் ஒவ்வொரு நாளும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இந்த கும்பமேளா காலங்களில் மட்டுமே வெளியே வரும் சாதுக்களும் பல்லாயிரக்கணக்கில் அங்கு முகாமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தை அமாவாசை நாளான இன்று புனித நீராட வழக்கத்தைவிட பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் ஒன்று திரண்டிருந்தனர். தடுப்புகளை உடைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடியதால்
ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் தாம் பேசியுள்ளதாகவும், இந்தத் துயர சம்பவத்தில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவில் நிகழ்ந்த விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. குடும்பத்தினரை இழந்த யாத்ரீகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்
கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிப்பதில் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக நான் முதலமைச்சர் யோகி
ஆதித்யநாத்துடன் பேசியுள்ளேன். நான் மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இப்படியான பெருந்துயரம் நிகழ்ந்த சில மணிநேரங்களிலேயே தை அமாவாசை நாள் என்பதால் சாதுக்களும் சங்கராச்சாரியார்களும் பெருந்திரளாக ஒன்று திரண்டு புனித நீராடினர். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து சாதுக்கள் மீது பூமழை தூவப்பட்டது. எந்த திரிவேணி சங்கமத்தில் மரண ஓலம் அடங்காமல் தொடர்ந்து கொண்டிருந்ததோ அதே திரிவேணி சங்கமத்தில் இப்படி ஹெலிகாப்டரில் பூமழை தூவி சாதுக்கள் மற்றும் சங்கராச்சாரியார்கள் புனித நீராடியது பெரும் அதிர்ச்சி தருகிறது என்கின்றனர் பக்தர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+