மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்கள்: பிரசாரத்துக்கே போகாத சீனியர் காங். தலைகள்!
டெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் யாரும் பிரசாரத்துக்கு செல்லாதது அக்கட்சி நிர்வாகிகளை கடும் அதிருப்தி அடைய வைத்திருக்கிறது.
மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபைகளுக்கு வரும் 21-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலங்களில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் பிரசாரங்களை தொடங்கிவிட்டனர்.

இதனால் பாஜக தொண்டர்கள் பெரும் உற்சாகத்துடன் தேர்தல் பணி ஆற்றி வருகின்றனர். ஆனால் தேர்தல் நெருங்கிய நிலையிலும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா என பெரும் தலைகள் யாரும் பிரசாரத்துக்கே செல்லவில்லை.
இரு மாநிலங்களிலுமே காங்கிரஸ் கட்சியில் வெடித்திருக்கும் கோஷ்டிபூசல்தான் இதற்கு பிரதான காரணமாக கூறப்படுகிறது. ஹரியானாவில் முன்னாள் மாநில தலைவர் அசோக் தன்வாரின் ஆதரவாளர்கள் நேற்று கூட கட்சி தலைமையகத்தில் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.
மகாராஷ்டிராவில் முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட 2-ம் கட்ட தலைவர்களிடம் தேர்தல் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் மூத்த தலைவர்களின் பிரசாரங்கள் இல்லை என்பதால் காங்கிரஸ் தொன்டர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
ஹரியானாவிலும் மகாராஷ்டிராவிலும் பாஜகவே ஆட்சியை தக்க வைக்க வாய்ப்புகள் இருப்பதாக களநிலவரங்கள் தெரிவிப்பதும் காங்கிரஸின் மந்தமான பிரசாரத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்பதும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications