Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டென ஆஃப் ஆன மைக்.. அவமானப்படுத்திட்டாங்க! ராஜ்யசபாவில் கொதித்த கார்கே! திருச்சி சிவா சப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மணிப்பூர் விவகாரம் குறித்து நாள் முழுவதும் விவாதிக்க வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிக்கொண்டு இருந்தபோது அவரது மைக் அணைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் கடந்த வாரம் வியாழன் அன்று நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாளிலேயே மணிப்பூர் பெண்கள் நிர்வாண வீடியோ தொடர்பாகவும், அங்கு அரங்கேறும் பழங்குடிகள், பெண்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல்கள் குறித்தும் எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர்.

Mallikarjun Karge angry on shutting of mic in Rajya sabha

இதனால் கூட்டத் தொடரின் முதல் நாளே நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. மறுநாள் வெள்ளிக்கிழமையும் இதேபோன்றுதான் அவை அமளி துமளியுடன் காணப்பட்டது. செய்தியாளர் சந்திப்பில் மணிப்பூர் விவகாரம் குறித்து பேசிய பிரதமர் மோடி மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் முன் பேச வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இதனால் வெள்ளிக்கிழமையன்றும் அவை நடவடிக்கைகள் முடங்கின. இந்த நிலையில் வார விடுமுறை முடிந்து கடந்த திங்கள்கிழமை மீண்டும் அவை கூடியது. அப்போதும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதை தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளிலும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் மணிப்பூர் தொடர்பாக தொடர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். மக்களவையில் அப்போது இருந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக லோக் சபாவில் விவாதிக்க அனுமதி அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

ஆனால் அவர்களின் கோரிக்கை வேறாக இருந்தது. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இது பற்றி பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதனை கண்டித்து இரவு முழுவதும் சஞ்சய் சிங் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். நேற்று காங்கிரஸ் எம்பி ரஜானி பாட்டில் இதேபோல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நேற்றும் எதிர்க்கட்சிகளின் அமளி துமளி தொடர்ந்ததால் அவை நடவடிக்கைகள் முடங்கின.
'
இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை அளித்தனர். மறுபக்கம் மாநிலங்களவையில் நாள் முழுவதும் மணிப்பூர் விவகாரம் குறித்து பேச வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.

சிறிது நேர விவாதத்திற்கு அனுமதி வழங்குவதாக மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்ததை அவர்கள் ஏற்கவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மாநிலங்களவையில் பேசியபோது அவரது மைக் அணைக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். மைக்கை அணைத்து தன்னை அவமானபடுத்திவிட்டதாக அவர் தெரிவித்தார்.

திமுக எம்பி திருச்சி சிவாவும் மல்லிகார்ஜுன் கார்கே மைக் அணைக்கப்பட்டதை கண்டித்தார். ஆனால், அவரது மைக் அணைக்கப்படவில்லை என அவைத் தலைவர் தன்கர் விளக்கமளித்தார். இது தொடர்பாக எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட மறுபக்கம் பாஜக எம்பிக்கள் "மோடி மோடி" என்று கோஷமிட்டனர். இந்த நிலையில் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையும் இதேபோல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+