மணிப்பூர் வன்முறை: குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவுடன் "இந்தியா" கூட்டணி நாளை சந்திப்பு
டெல்லி: இந்தியா கூட்டணி தலைவர்கள் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை நாளை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். இந்த சந்திப்பின் போது மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மனு அளிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
மணிப்பூரில் கடந்த மே மாதம் 3- ம் தேதி முதல் இரண்டரை மாதங்களுக்கு மேலாக வன்முறை நடந்து வருகிறது. இந்த வன்முறையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் கைக்கொடுக்கவில்லை. தொடர்ந்து குக்கி - மைத்தேயி மக்கள் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன.

இது இன்னும் ஏற்கப்படாததால் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பதிலளித்து பேசும் விதமாக, மத்திய அரசு மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நோட்டீஸ் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி விவாதம் நடைபெற உள்ளது. இதற்கிடையே, ‛‛இந்தியா'' என்ற பெயரில் உருவாகி உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் எம்பிக்கள் மணிப்பூரை நேரில் ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி 2 நாள் பயணமாக இன்று 21 பேர் கொண்ட குழு டெல்லியில் இருந்து மணிப்பூருக்கு புறப்பட்டு சென்றது. அங்கு நிலவும் சூழலை நேரடியாக ஆய்வு செய்தது. இந்த நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை இந்தியா கூட்டணி தலைவர்கள் நாளை சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின் போது, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியிடம் மனு அளிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறாதது குறித்து முறையிடவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
-
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!











Click it and Unblock the Notifications