மணிப்பூரில் மீண்டும் பதற்றம்.. வன்முறையில் 21 பேர் காயம்.. பாதுகாப்பு படையினருடன் மோதல்!
இம்பால்: மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் பாதுகாப்பு படையினருக்கும் வன்முறை கும்பலுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதில் 21 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் 'மெய்தி' இன மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், இதற்கு குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக கடந்த மே 3-ந் தேதி, மணிப்பூரில் பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது.
மணிப்பூர் வன்முறையில் 160 பேருக்கு மேல் பலியாகி உள்ள நிலையில், பெண்கள் ஆடைகள் இன்றி இழுத்து செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் உயிரிழந்தவர்களில் குக்கி பிரிவை சேர்ந்த 35 பேரின் உடல்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்ய திட்டமிட்டப்பட்டு இருந்தது. இதனால், பக்கத்து மாவட்டங்களில் பதற்றம் நிலவியது.

அண்டை மாவட்டமான பிஸ்ணுபூரின் காங்வை, பவுகாக்சாவோ பகுதிகளில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது. இதில்தான் வன்முறை சம்பவங்கள் வெடித்து. ராணுவமும், மாநில போலீஸ் அதிரடிப்படையினரும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறையாளர்களை விரட்டியடித்தனர். இதில் 21 பேர் காயமடைந்தனர். இந்த வன்முறையால் இம்பாலை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவியது.
மணிப்பூரில் நிலமை மோசமாக இருப்பதாகவும் கொந்தளிப்பாக இருப்பதாகவும் மாநில போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்ரக், ஹரதோதெல் மற்றும் சென்ஜன்சிரங் ஆகிய பகுதியில் ஆகிய இடங்களில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகவும் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் காயங்கள் அடைந்துள்ளார்.
சில இடங்களில் காவல் நிலையங்களை தாக்கிய கும்பல் ஆயுதங்களை பறித்து சென்றதாகவும் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவங்களை தொடர்ந்து இம்பால் மேற்கு, கிழக்கு உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னதாக குக்கி இனத்தவரின் 35 உடல்களை அடக்கம் செய்யும் நிகழ்ச்சிக்கு மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்தது. மணிப்பூரில் மீண்டும் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டுள்ளது அங்குள்ள மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications