மணிப்பூர் வீடியோ விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை
டெல்லி: நாட்டையே உலுக்கிய மணிப்பூர் வீடியோ விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மணிப்பூர். இங்கு பிரேன்சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் 'மெய்தி' இன மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், இதற்கு குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக கடந்த மே 3-ந் தேதி, மணிப்பூரில் பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. மெய்தி இன மக்களுக்கும் குக்கி இன மக்களுக்கும் இடையேயான வன்முறை வாரக்கணக்கில் நடைபெற்றது. இந்த வன்முறையை ஒடுக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது. வன்முறை சற்று ஓய்ந்த நிலையில், கடந்த வாரத்தில் ஒரு வீடியோ ஒன்று வெளியானது.
கடந்த மே மாதம் 4-ந் தேதி பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோவில் பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் ஆடைகள் இன்றி இழுத்து செல்லப்பட்டது பதிவாகியிருந்தது. ஒட்டு மொத்த தேசத்தையும் இது உலுக்கியது. நாட்டையே உறைய வைத்த இந்த கொடூர சம்பத்தில் ஈடுபட்ட நபர்கள் சுமார் 7 பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை விதிக்கப்படும் என்று மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கி வருகின்றன. மணிப்பூர் குறித்து விவாதம் நடத்த தயார் என்று மத்திய அரசு கூறியது. விவாதத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளிப்பார் என்று கூறியதை எதிர்கட்சிகள் ஏற்கவில்லை.
இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகளின் ' இந்தியா' கூட்டணி முடிவு செய்தது. இதற்கான நோட்டீசை சபாநாயகரிடம் அளித்துள்ளது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டார். நம்பிக்கையில்லா தீர்மானத்தை எப்போது விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது என்று பிறகு அறிவிப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
மணிப்பூர் விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சூழலில், மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிப்பூர் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றவும் மத்திய அரசு மனு தாக்கல் செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய முடிவு செய்து இருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications