முடிவுக்கு வருகிறதா மாவோயிஸ்டுகள் அத்தியாயம்? தலைவர் முப்பல்ல லட்சுமண ராவ் எனும் கணபதி சரணடைகிறார்?
டெல்லி: மாவோயிஸ்டுகள் அமைப்பின் தலைவரான முப்பல்ல லட்சுமண ராவ் எனும் கணபதி அரசிடம் சரணடைய முடிவு செய்திருப்பதாக வெளியான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்தியாவில் அரசுக்கு எதிரான சித்தாந்த ரீதியான ஆயுத இயக்கமாக இயங்கி வருகின்றனர் மாவோயிஸ்டுகள். நாட்டின் மத்திய பகுதிகளின் வனப்பகுதிகளையும் ஆதி பழங்குடி மக்களையும் தங்களது பாதுகாப்பு அரணாக அமைத்துக் கொண்டு மாவோயிஸ்டுகள் செயல்பட்டு வருகின்றனர்.

நாட்டின் மத்திய மாவட்டங்களில் பெரும்பாலானவற்றை ஒருகாலத்தில் மாவோயிஸ்டுகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஆனால் காலமும் தகவல் தொழில்நுட்பமும் விஸ்வரூபம் எடுக்க, ஆதிகுடிகளின் வாழ்வியலிலும் மாற்றங்கள் ஏற்பட மாவோயிஸ்டுகளின் பிடி தளர்ந்து கொண்டே வருகிறது.
மாவோயிஸ்டுகளின் நேரடி சித்தாந்த எதிரியான வலதுசாரிகள் இந்தியாவில் அடுத்தடுத்து ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து வருகின்றனர். ஆனால் மாவோயிஸ்டுகளால் இந்த அரசுக்கு எதிரான எந்த ஒரு நகர்வையும் மேற்கொள்ள இயலாத கையாலாகத நிலையில்தான் இருக்கின்றனர். இது மாவோயிஸ்டுகளின் ஆகப் பெரும் பலவீனமாகவே கருதப்படுகிறது.
இந்த நிலையில் மாவோயிஸ்டுகளின் முதுபெரும் தலைவரான முப்பல்ல லட்சுமண ராவ் எனும் கணபதி அரசாங்கத்திடம் சரணடைய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. கணபதியின் தலைக்கு ஏற்கனவே அரசுகள் சுமார் ரூ2.15 கோடி விலை நிர்ணயித்திருக்கும் நிலையில்தான் இந்த முடிவை கணபதி தரப்பு எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சத்தீஸ்கர்- ஒடிஷா வனப்பகுதிகளைவிட்டு வெளியேவர வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார் கணபதி. அப்படி கணபதி அரசாங்கத்ஹிடம் சரணடைந்தால் இந்தியாவில் மாவோயிஸ்டுகள் எனும் ஆயுதந்தாங்கிய புரட்சிகர இயக்கத்தின் இறுதி அத்தியாயம் நெருங்கிவிட்டதாகவே அர்த்தம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications