ஹத்ராஸ் போகும் வழியில் கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் மீது உ.பி. போலீஸ் போட்ட வழக்கு டிஸ்மிஸ்
டெல்லி: கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சித்திக் கப்பன் மற்றும் மூன்று நபர்களுக்கு எதிரான வழக்கை மதுரா நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் ஹர்தாஸ் மாவட்டத்தில் தலித் இளம் பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
அப்போது அந்த பெண்ணின் குடும்பத்தை சந்திக்க ஹத்ராஸுக்கு சித்திக் கப்பன், அட்டிகுர் ரஹ்மான், மசூத் அகமது உள்ளிட்ட சில பத்திரிக்கையாளர்கள் சென்றனர். ஆனால் வழியிலேயே காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்தது. பொது அமைதியை குலைப்பதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

சட்டவிரோத செயல் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்பு, தேசவிரோதச் செயல் ஆகிய குற்றச்சாட்டுகளும் பிறகு சித்திக் மீது சுமத்தப்பட்டன. கடந்த அக்டோபர் 5ஆம் தேதி மதுராவிற்கு சித்திக்கை, காவல்துறையினர் அழைத்து சென்றனர். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் UAPA கீழ் சித்திகை சிறை வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, மதுரா நீதிமன்றம் இன்று, சித்திக் கப்பன் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டது.
சிஆர்பிசியின் பிரிவு 116 (6) ன் படி நிர்ணயிக்கப்பட்ட ஆறு மாத காலத்திற்குள் காவல்துறை அவர்களுக்கு எதிரான விசாரணையை முடிக்க தவறியதால், கைதானவர்களுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்வதாக மாஜிஸ்திரேட் ராம் தத் ராம் தீர்ப்பளித்துள்ளார்.
குற்றவியல் நடைமுறைக் கோட் (சிஆர்பிசி) பிரிவுகள் 151 (அறியக்கூடிய குற்றங்களை தடுக்க கைது செய்தல்), 107 (பிற நிகழ்வுகளில் அமைதியைக் காப்பதற்கான பாதுகாப்பு) மற்றும் 116 (தகவல்களின் உண்மை குறித்து விசாரித்தல்) ஆகியவற்றின் கீழான வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications