முஸ்லிம்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதா? பாஜக மீது மாயாவதி திடீர் பாய்ச்சல்
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசும் உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசும் முஸ்லிம்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி திடீரென குற்றம் சாட்டி பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, நீண்டகாலமாக பாஜக மற்றும் இந்தியா கூட்டணியில் இணையாமல் தனித்து செயல்படுகிறார். ஆனால் மாயாவதியின் செயல்பாடுகள் மறைமுகமாக பாஜகவுக்கு உதவுவதாக இந்தியா கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

அண்மையில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ்- சமாஜ்வாதி கட்சிகளுடன் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்திருந்தால் லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கும் என கூறியிருந்தார். அதேபோல டெல்லி சட்டசபை தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
இந்த நிலையில் இன்று தமது எக்ஸ் பக்கத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் பாஜகவை விமர்சித்து பதிவிட்டுள்ளார் மாயாவதி. அவர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இந்தியா என்பது மதச்சார்பற்ற நாடு. அனைத்து மதங்களும் உரிய மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள், அனைத்து மதங்களையும் எந்த வித வேறுபாடும் இல்லாமல் சமமாக நடத்த வேண்டும். ஆனால் மத விவகாரங்களில் முஸ்லிம்கள் மட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகின்றனர். இதனை நியாயப்படுத்தவே முடியாது.
மதம் சார்ந்த வழிபாடுகள், திருவிழாக்களுக்கான சட்டங்களும் கட்டுப்பாடுகளும் அனைத்து மதங்களுக்கும் பொதுவானதாகத்தான் இருக்க வேண்டும். இதில் எந்த பாகுபாடும் காட்டக் கூடாது. ஆனால் அப்படி எதுவும் தற்போது நடப்பதாகவும் தெரியவில்லை.
சமூகத்தில் இயல்பாக நிலவும் அமைதி, மதநல்லிணக்கத்தை இத்தகைய பாகுபாடான நடவடிக்கைகள் சீர்குலைக்கின்றன. இது மிகப் பெரும் கவலையைத் தருகிறது. ஆகையால் மதம் சார்ந்த விவகாரங்களில் பாகுபாடுகளை மத்திய, மாநில அரசுகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இவ்வாறு மாயாவதி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications