'மிக்சாங்' வரலாம்.. தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்களில் 18 தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள் பக்கா ரெடி!
டெல்லி: வங்க கடலில் உருவாகி உள்ள மிக்சாங் புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிஷா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 18 தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்திருப்பதாவது: வங்கக்கடலில் உருவாகவிருக்கும் 'மிச்சாங்' புயலை எதிர்கொள்ள மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளின் தயார்நிலையை ஆய்வு செய்வதற்காக அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா தலைமையில் தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழு நேற்று ஆலோசனை நடத்தியது.

மிக்சாங் புயல்: 'மிக்சாங்' புயல் தொடர்பான நிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) தலைமை இயக்குநர், குழுவிடம் விளக்கினார். தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருந்தது. .
நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே..: இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், டிசம்பர் 3-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் புயலாகவும் மாறும். மேலும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழக கடற்கரையை அடையும். அதன் பிறகு, 5-ம் தேதி அதிகாலையில் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே புயலாக மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும்.
யார் யார் பங்கேற்பு?: தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், புதுச்சேரியின் நிதித் துறைச் செயலாளர் ஆகியோர் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்றனர். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவர்கள் மேலாண்மைக் குழுவிடம் விளக்கினர். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். போதுமான தங்குமிடங்கள், மருந்துகள் மற்றும் அவசர சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
18 குழுக்கள் தயார்: தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் செல்ல தேசிய பேரிடர் மீட்பு படையின் 18 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. கடலோரக் காவல்படை, ராணுவம் மற்றும் கடற்படையின் மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள், கப்பல்கள் மற்றும் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு அட்வைஸ்: மத்திய முகமைகள் மற்றும் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் புதுச்சேரி அரசுகளின் தயார்நிலை நடவடிக்கைகளை ஆய்வு செய்த மத்திய அமைச்சரவைச் செயலாளர், தேவையான அனைத்து தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். உயிர்ச்சேதம் ஏற்படாமல் தடுக்கவும் சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்படும் சேதத்தை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுமாறு அவர் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை கேட்டுக் கொண்டார்.
மீனவர்கள்: கடலில் உள்ள மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அமைச்சரவை செயலாளர் உறுதியளித்தார். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களின் தலைமைச் செயலாளர், புதுச்சேரி நிதித்துறை செயலாளர், மத்திய உள்துறை செயலாளர், மீன்வளத்துறை செயலாளர், மின்துறை செயலாளர், உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications