இந்தியாவில் நடப்பாண்டு இறுதியில்... கொரோனா வைரஸ் மருந்து... மத்திய அமைச்சர் நம்பிக்கை!!
டெல்லி: கொரோனா வைரஸூக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் அனைத்தும் சரியாக சென்றால் நடப்பாண்டின் இறுதியில் இந்தியாவில் தடுப்பு மருந்து கிடைத்துவிடும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவிலும் தயாராகி வருகிறது. தற்போது இரண்டு மருந்துகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு மருந்தும் இந்தியாவில் மனித ஆய்வுக்கு உட்படுத்தபட்டுள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் பேட்டி அளித்து இருந்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் இயக்குனர் ஜெனரல் டாக்டர் பல்ராம் பார்கவா அளித்திருந்த பேட்டியில், ''பாரத் பயோடெக்கின் தடுப்பு மருந்தும், சைடஸ் கேடிலாவின் மருந்தும் பரிசோதனை அடிப்படையில் ஆய்வில் உள்ளன. இவற்றில் சைடஸ் கேடிலா மருந்து இரண்டாவது கட்ட ஆய்வில் உள்ளது'' என்று தெரிவித்து இருந்தார்.
இவை தவிர ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் தயாரித்த தடுப்பு மருந்துக்கு இந்தியாவில் கோவிஷீல்டு என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மருந்தை இந்தியாவில் தயாரிக்க சீரம் இன்ஸ்ட்டிடியூட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்தும் இந்தியாவிலும் மனித பரிசோதனைக்கு நடப்பு வாரத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. பிரிட்டனில் இந்த மருந்து மூன்றாம் கட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் நேரடியாக இண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.
இதையடுத்து இந்தியில் ட்வீட் செய்திருக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், ''அனைத்தும் சரியான பாதையில் சென்றால் நடப்பாண்டு இறுதியில் கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் கிடைக்கும்'' என்று பதிவிட்டுள்ளார்.
இத்துடன் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் நாடுகள் எந்தளவிற்கு உள்ளன. எந்தெந்த மருந்து எந்தக் கட்ட ஆய்வில் உள்ளன, எப்போது மக்களுக்கு கிடைக்கும் போன்ற விவரங்கள் அடங்கிய இணையதளத்தை மத்திய சுகாதாரத்துறை உருவாக்கி வருகிறது. இந்த இணையத்தின் வாயிலாக அனைத்து விவரங்களையும் விரைவில் அறிந்து கொள்ளலாம். இந்த இணையதளம் அனைத்து மொழிகளிலும் கிடைக்கும் என்று ஐசிஎம்ஆர் தொற்றுநோய் பிரிவு தலைவர் சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார். இந்த இணையதளம் அடுத்த வாரம் செயலுக்கு வரும் என்று பாண்டா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நேற்று மட்டும் 69,239 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. இத்துடன் இந்தியாவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 30,44,940 ஆக அதிகரித்துள்ளது. 56,706 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய கணக்கின்படி 24 மணி நேரத்தில் 912 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications