"மாநிலங்களுக்கு வேட்டு".. மோடி 3.0 வேறு மாதிரி இருக்க போகிறது.. பிரசாந்த் கிஷோர் பரபர கணிப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரும் நிலையில் "மோடி 3.0ல்" பாஜக முக்கியமான பல மாற்றங்களை ஏற்படுத்த போவதாக அரசியல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.

இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில், பிரஷாந்த் கிஷோர் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளதாகவே கணித்து உள்ளார். அதில், மோடி 3.0 அரசாங்கம் மீண்டும் ஆட்சி பொறுப்பேற்கும் போது அதிரடியாக பல விஷயங்களில் களமிறங்கத் தொடங்கும் என்று நினைக்கிறேன். அதிகாரம் மற்றும் வளங்கள் இரண்டிலும் மத்திய அரசின் ஆதிக்கம் அதிகம் இருக்கும்.

Modi 3 0 will start with a bang says Prashant Kishor on his Lok sabha election Prediction

மத்திய அரசின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் வகையில் மோடி அரசு கவனம் செலுத்தும். மாநிலங்களின் நிதி சுயாட்சியைக் குறைக்க மோடி முயற்சிகளை எடுப்பார். மாநிலங்களிடம் இருக்கும் நிதி சுயாட்சி மொத்தமாக மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளன.

இந்த முறை ஆட்சிக்கு எதிரான அலை எல்லாம் இல்லை. பிரதமருக்கு எதிராக பரவலான கோபம் இல்லை. பாஜக 303 இடங்களை வெல்லும். மாநிலங்களுக்கு தற்போது பெட்ரோலியம், மதுபானம் மற்றும் நிலம் ஆகிய மூன்று முக்கிய வருவாய் ஆதாரங்கள் உள்ளன. பெட்ரோலியம் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டால் நான் ஆச்சரியப்படமாட்டேன். இதன் மூலம் மாநிலங்களின் பலம் குறையும், அவர்களின் பொருளாதார பலம் வெகுவாக மோடியால் குறைக்கப்படும்.

மோடி 3.0 வேறு மாதிரி இருக்கும். பல அதிரடி நடவடிக்கைகள் இதில் எடுக்கப்படலாம். சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) கீழ் பெட்ரோலியத்தை வைப்பது மற்றும் மாநிலங்களின் நிதி சுதந்திரத்திற்கு முக்கிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது உள்ளிட்ட முக்கிய மாற்றங்களை பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சியில் கொண்டு வர வாய்ப்பு உள்ளது என்று அரசியல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.

பாஜக வெற்றிபெறும்: மேலும் அவர் கூறுகையில், பாஜக கண்டிப்பாக மீண்டும் ஆட்சி அமைக்கும். மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 370 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி தனித்து வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லவே இல்லை. அவர்கள் 370 இடங்களில் தனியாக வெல்ல வாய்ப்பே இல்லை.

அதற்கான சான்ஸ் பூஜ்ஜியம் ஆனாலும் அவர்கள் இந்த நம்பரை திரும்ப திரும்ப சொல்ல காரணம் இருக்கிறது. அது ஒரு இது உளவியல் விஷயம். இது எதிர்க்கட்சிகளுக்கு உளவியல் ரீதியான அடியாகும். பாஜகவால் அந்த இலக்கை எடுக்க முடியாது. ஆனாலும் உளவியல் ரீதியாக எதிர்கட்சிகளை அடிக்க இப்படி செய்கின்றனர்,

கடந்த முறை வாங்கியதை விட கூடுதலாக 10-20 சீட் வாங்கினால் ஆச்சர்யம். ஆனால் மொத்தமாக 60-70 சீட் கூடுதலாக வாங்குவதற்கு சான்ஸே இல்லை.

370வது சட்டப்பிரிவின் பின்னணியில் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் 370 என்ற எண்ணிக்கையை நரேந்திர மோடி குறிப்பிட்டார், 370வது சட்ட பிரிவை பாஜக நீக்கியது. இதனால் பாஜக தனியாக 370 இடங்களைப் பெறும் என்று மோடி நம்புகிறார். சில இடங்களில் என்டிஏ 400 ஐத் தாண்டும் என்றும் மோடி கூறினார். அவர் உரையாற்றிய பல பேரணிகளில் 370 இடங்கள் இலக்கு என்று போஸ்டர்கள் வைக்கப்படுகின்றன தேசிய அளவில் பாஜக தனியாக 370 எல்லாம் எடுக்க சான்ஸ் குறைவு. ஆனால் பாஜக கண்டிப்பாக மீண்டும் ஆட்சி அமைக்கும்., என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+