நாட்டுக்குள் நுழைந்த அரக்கன் ஆர்மி.. மோடியிடம் பேச.. மீண்டும் மீண்டும் போனை போட்ட வங்கதேச யூனுஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மியான்மர் - வங்கதேச எல்லைப் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் என்எஸ்ஏ அஜித் தோவல் ஆகியோரை தொடர்பு கொள்ள வங்கதேச நாட்டின் மூத்த ஆலோசகர் முகமது யூனுஸ் முயற்சித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் இத்தனை காலம் இந்தியாவிற்கு எதிராக காய் நகர்த்தி வந்தார் யூனுஸ்.. தற்போது அதே இந்தியாவிடம் இறங்கி வரும் நிலை வங்கதேசத்திற்கு ஏற்பட்டு உள்ளது.

வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த போராட்டம் கலவரம் உள்நாட்டு போர் போல மாறிய நிலையில் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். அவர் நாட்டை விட்டு வெளியேறி மேற்கு வங்கத்தில் தஞ்சம் அடைந்தார். வங்கதேச பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான கனோபாபனுக்குள் நூற்றுக்கணக்கானோர் நுழைந்தனர்.

bangladesh world

இதையடுத்து அங்கே ஆட்சி கவிழ்ந்தது. அதோடு ஷேக் ஹசீனா டெல்லியில் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டார். இதையடுத்து வங்கதேச நாட்டின் மூத்த ஆலோசகராக முகமது யூனுஸ் களமிறக்கப்பட்டார்.

இந்த நிலையில் இந்தியாவிற்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை முகமது யூனுஸ் வைத்து இருந்தார். வங்கதேச மக்கள் இப்போது ஹசீனா வெளியேற்றப்பட்டதைக் கொண்டாடுகிறார்கள், அதே நேரத்தில் கொண்டாட்டமே இங்கே கலவரத்திற்கு, மோதலுக்கு கூட வழிவகுத்து விடுகிறது. நாட்டில் விரைவில் ஸ்திரத்தன்மை திரும்பும். வங்கதேசம் 170 மில்லியன் மக்கள் வாழும் நாடு. அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். முறையாக தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அவர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த வேண்டும்.

ஜனநாயகம்தான் ஸ்திரமின்மைக்கு மருந்து என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். வங்கதேசம் ஸ்திரமற்றதாக மாறினால், இந்தியாவின் வடகிழக்கு மற்றும் மேற்கு வங்க மாநிலம், மியான்மருடன் சேர்ந்து பாதிக்கப்படும். வங்கதேசம் பாதித்தால் எல்லையில் உள்ள இந்தியாவின் மாநிலங்களும் பாதிக்கும் என்பதை மறக்க வேண்டாம், என்று இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசி இருந்தார்.

இந்தியாவை காலம் முழுக்க எதிர்த்த அதே யூனுஸ் இந்தியாவின் உதவிய நாடும் நிலைக்கு வந்துள்ளார். மியான்மர் - வங்கதேச எல்லைப் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் என்எஸ்ஏ அஜித் தோவல் ஆகியோரை தொடர்பு கொள்ள வங்கதேச நாட்டின் மூத்த ஆலோசகர் முகமது யூனுஸ் முயற்சித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

இத்தனை காலம் இந்தியாவிற்கு எதிராக காய் நகர்த்தி வந்தார் யூனுஸ்.. தற்போது அதே இந்தியாவிடம் இறங்கி வரும் நிலை வங்கதேசத்திற்கு ஏற்பட்டு உள்ளது.

ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதிலிருந்து வங்கதேசம் வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்து வருகிறது. வங்கதேச-மியான்மர் எல்லையில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.

மியான்மரின் கிளர்ச்சிக் குழுவான அரக்கன் ஆர்மி (ஏஏ) வங்கதேசத்தின் டெக்னாஃப் பகுதியின் சில பகுதிகளை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோஹிங்கியா அகதிகள் முகாம்கள் மற்றும் வங்கதேசத்தின் புகழ்பெற்ற செயின்ட் மார்டின் தீவு ஆகியவை இந்த இடத்திற்கு அருகே உள்ளது. இதனால் வங்கதேசம் கடுமையான சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. மியான்மரின் கிளர்ச்சிக் குழுவான அரக்கன் ஆர்மி வங்கதேசத்தை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

மியான்மரின் கிளர்ச்சிக் குழுவான அரக்கன் ஆர்மிக்கு பின் இந்தியா உள்ளது.. சீனா உள்ளது.. ஏன் அமெரிக்கா உள்ளது என்றும் கூட கூறப்படுகிறது. ஆனால் முகமது யூனுஸ் ஆட்சிக்கு எதிராக இது நடப்பதால்.. பெரும்பாலும் இந்தியாவின் மாஸ்டர்பிளானாக இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அந்நாட்டு ஊடகங்களின் அறிக்கையின்படி, எல்லையில் அரக்கன் ராணுவத்திற்கும் வங்கதேசப் படைகளுக்கும் இடையே பல துப்பாக்கிச் சண்டைகள் நடந்துள்ளன. வங்கதேச பிரதேசத்தின் சில பகுதிகளை அரக்கன் ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக உள்ளூர் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் இந்த விவகாரம் குறித்து வங்கதேச அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+