நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிந்தது - இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டது. இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 நாட்களுடன் முடித்துக் கொள்ளப்பட்டுள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த கூட்டத்தொடர் இன்றுடன் முடித்துக்கொள்ளப்பட்டு இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. 57 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடே கடந்த 5 மாதங்களாக முடங்கியிருக்கும் சூழ்நிலையில் நிலுவையில் இருந்த மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக 5 மாதங்களுக்குப் பிறகு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. அக்டோபர் 1 ஆம் தேதி இந்த கூட்டத்தொடர் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ராஜ்யசபா நடைபெறும் நேரமும், லோக்சபா நடைபெறும் நேரமும் மாற்றப்பட்டது. காலை நேரத்தில் ராஜ்யசபா கூட்டமும், மாலை நேரத்தில் லோக்சபா கூட்டமும் நடைபெற்றது. இரு அவைகளும் தினமும் 4 மணி நேரம் மட்டுமே நடைபெற்றன.
கொரோனா கால விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான வார விடுமுறை இன்றி இரு அவைகளும் இயங்கின. உறுப்பினர்கள் தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து கூட்டத்தொடரில் பங்கேற்க வசதியாக இரு அவைகளும் ஒங்கிணைக்கப்பட்டன.
மழைக்கால கூட்டத் தொடரில் வேளாண் மசோதா, தொழிலாளர் சட்ட மசோதாக்கள் எதிர்கட்சியினரின் அமளி துமளி எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் புறக்கணிக்கப்போவதாக அறிவித்து வெளிநடப்பு செய்தனர்.
இதனிடையே இந்த கூட்டத்தொடரில் பங்கேற்ற 25க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
கடைசி நாளான இன்று எதிர்க்கட்சிகள் அவையில் இல்லாத நிலையில், தொழிலாளர் தொடர்பான 3 சட்ட மசோதாக்களை நிறைவேற்றக்கூடாது என எதிர்க்கட்சிகள் சார்பில் அவைத்தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. லோக்சபாவில் நேற்று நிறைவேற்றப்பட்ட 3 தொழிலாளர் மசோதாக்களும் இன்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. ராஜ்சபாவை காலவரம்பின்றி ஒத்தி வைப்பதாக காலையில் சபை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். ராஜ்யசபா கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று பிரதமர் மோடி அவைக்கு வந்திருந்தார்.
அதே போல லோக்சபாவை காலவரம்பின்றி ஒத்திவைப்பதாக லோக்சபா தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். கடந்த பத்து நாட்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கார சார விவாதங்கள், போராட்டங்கள், வெளி நடப்புகள் நடைபெற்றன இந்த மழைக்கால கூட்டத்தொடரில் வேளாண் மசோதாவினால் அனல் பறந்தது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications