போதையில் வாகனம் ஓட்டினால் இனி ரூ.10,000 அபராதம்.. என்ன தவறுக்கு என்ன அமவுன்ட்.. முழு விவரம்
டெல்லி: போதையில் வாகனம் ஓட்டினால் இனி 10 ரூபாய் வரை அபாரதம் செலுத்த வேண்டிய நிலை வரும். இதேபோல் தலை கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ. ஆயிரம் அபராதம் விதித்துவிடுவார்கள். இதுபோன்ற பல்வேறு சாலை விதிகளை மீறி செயல்படுவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கும் அம்சங்கள் கொண்ட சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா காலாவதியாகிவிட்டது. இதையடுத்து மீண்டும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி போதையில் வாகனம் ஓட்டுதல், சிறார் வாகனம் ஓட்டுதல், உரிமம் இல்லாமல் ஓட்டுதல், அதிவேக பயணம், அதிக சரக்குகளுடன் பயணம் உள்ளிட்ட விதிமீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் வகையில் மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துளளது.
மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா கடந்த மக்களவையில் ஏற்கனவே நிறைவேறிவிட்டது. மாநிலங்களவையில் நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில். நீண்ட நாட்கள் கிடப்பில் கிடந்ததால் இந்த மசோதா காலாவதியானது, இந்நிலையில் மசோதாவை சட்டமாக்கும் முயற்சியை மத்திய அரசு மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்படி மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.

ஹெல்மெட் போடாட்டி ரூ.1000
இதன்படி, இன்சூரன்ஸ் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டிச்சென்றால் 2 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிப்பார்கள். இதேபோல் தலைகவசம் (ஹெல்மெட்) அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 3 மாதம் ஓட்டுநர் உரிமம் நிறுத்திவைப்பு தண்டனை வழங்கப்படும். இதேபோல் மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் வரை அபாரதம் விதிக்கப்படும். செல்போன் பேசிக்கொண்டு ஓட்டினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

3வருடம் சிறை தண்டனை
சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் இதுவரை எச்சரித்து அனுப்புவார்கள்.இனி சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் அல்லது காப்பாளருக்கு 25 ஆயிரம் அபராதம் மற்றம் 3 ஆண்டுசிறை தண்டனை கிடைக்கும். ஒட்டுநர் உரிமத்திற்கான விதிமுறைகளை மீறியவர்களூக்கு 25 ஆயிரம் முதல் ஒரு லடசம் வரை அபராதம் விதிக்கப்படும்.

சிக்னலில் நிற்காவிட்டால் 1000
அதிக வேகத்தில் சென்றால் முன்பு 400 ரூபாய் அபராதம் இருந்தது. இனி ஆயிரம் ரூபாயும், பெரிய வாகனங்களுக்கு 2 ஆயிரமும் அபராதம் விதிப்பார்கள். சிவப்புவிளக்கு எரியும் போது நிற்காமல் வாகனத்தை இயக்கினால் இதுவரை 100 முதல் 300 ரூபாய் அபராதம் இருந்தது. இனி 1000 ரூபாய் அபராதம் விதிப்பார்கள். லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் இதுவரை 500 ரூபாய் அபராதம் விதிப்பார்கள், இனி 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பார்கள்.

உடனே அமலுக்கு வரும்
இந்த சட்டம் மக்களவையில் எளிதில் நிறைவேறிவிடும்.மாநிலங்களையில் நிறைவேற்றப்படும் பட்சத்தில் உடனே அமலுக்கு வந்துவிடும். எனவே போக்குவரத்துவிதிகளை மீறினால் நிச்சயம் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும். ஆனால் இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, அதிமுக மற்றும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டுகள் இதுவரை எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த மசோதா நிறைவேறினால் மாநிலங்களின் உரிமையில் மத்திய அரசு தலையிடுவதை ஊக்குவிக்கும் என இக்கட்சிகள் கூறுகின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications