மிஸ்டர் கெஜ்ரிவால் டெல்லிக்காரர்கள்னா யார்...? ப.சிதம்பரம் சுளீர் கேள்வி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லிக்காரராக தகுதி பெறுவதற்கு என்ன தேவை என்பதை வரையறுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் தெரிவித்தார்.
நாட்டின் தலைநகரான டெல்லியில் கொரோனா மருத்துவமனைகளில் டெல்லியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே படுக்கைகள் ஒதுக்க வேண்டும் என்று அம்மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி அரசு எடுத்த முடிவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இந்த நடவடிக்கையை கேள்வி எழுப்பிய அவர், கெஜ்ரிவால் இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு ஏதேனும் சட்டபூர்வமான கருத்தை எடுத்துக் கொண்டாரா என்று ஆச்சரியப்பட்டார்.

ப சிதம்பரம் வெளியிட்ட டுவிட் பதிவில், கெஜ்ரிவால் டெல்லி மருத்துவமனைகள் டெல்லி மக்களுக்கு மட்டுமே என்று கூறுகிறார். டெல்லிக்காரர்கள் யார் என்று அவர் தயவுசெய்து எங்களிடம் கூறுவாரா? நான் டெல்லியில் வசிக்கிறேன் அல்லது வேலை செய்கிறேன், நான் டெல்லிக்காரரா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
ப சிதம்பரம் தனது புரிதலின் படி, மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மக்கள் நாட்டில் பட்டியலிடப்பட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற உரிமை உண்டு என்றார்.
"ஜான் ஆரோக்ய யோஜனா / ஆயுஷ்மான் பாரதத்தில் ஒரு நபர் பதிவுசெய்திருந்தால், அவர் இந்தியாவில் எங்கிருந்தும் பட்டியலிடப்பட்ட எந்த மருத்துவமனையிலும், பொது அல்லது தனியார், சிகிச்சை பெறலாம் என்று நினைத்தேன். கெஜ்ரிவால் தனது அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு சட்டபூர்வமான ஆலோசனையை எடுத்துக் கொண்டாரா?" என்றும் ப சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
டெல்லி அரசாங்கத்தால் நடத்தப்படும் மருத்துவமனைகள் மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் தேசிய தலைநகரில் வசிப்பவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என்று முதல்வர் கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

"டெல்லி அரசாங்கத்தின் கீழ் 10,000 படுக்கைகள் டெல்லி குடியிருப்பாளர்களுக்காக வைக்கப்படும் என்று நாங்கள் இப்போது முடிவு செய்துள்ளோம். மத்திய அரசின் கீழ் உள்ள படுக்கைகள் அனைவருக்கும் பயன்படுத்தப்படலாம். சிறப்பு சிகிச்சையை உள்ளடக்கிய தனியார் மருத்துவமனைகள் அனைவரும் பயன்படுத்தலாம்" என்று முதல்வர் கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
Recommended Video
இந்த முடிவு, டெல்லி அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட மருத்துவர்களின் குழுவின் ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்டது.. ஜூன் இறுதிக்குள் டெல்லிக்கு 15,000 படுக்கைகள் தேவைப்படும் என்று குழு மதிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications