மார்ச் 8 முதல்.. எனது சமூக வலைதள பக்கங்களை... பெண்களே நிர்வகிக்கலாம்.. மோடி திடீர் அதிரடி!
டெல்லி: பெண்கள் தினமான மார்ச் 8-ஆம் தேதி எனது சமூகவலைதள கணக்குகளை பெண்கள் நிர்வகிக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஞாயிற்றுக்கிழமை ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலிருந்து விலகவுள்ளதாக நேற்றைய ட்வீட்டின் அர்த்தம் தற்போது புரிய வருகிறது.
Recommended Video
பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் நரேந்திர மோடி. இந்தியாவில் இவரை பின் தொடர்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்த பட்டியலில் இவர் முதலிடத்தில் உள்ளார்.
வாழ்த்து, இரங்கல், ஆலோசனை, அறிவுரை, வரவேற்பு என எதுவாக இருந்தாலும் சமூகவலைதளங்களில் மோடி கருத்து தெரிவிப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்றைய தினம் இந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப் ஆகிய சமூக வலைதள கணக்குகளை விட்டுவிடலாம் என்று யோசிக்கிறேன். உங்கள் அனைவரையும் போஸ்ட் செய்ய வைப்பேன் என தெரிவித்திருந்தார்.

போஸ்ட்
வாழ்த்து, இரங்கல், ஆலோசனை, அறிவுரை, வரவேற்பு என எதுவாக இருந்தாலும் சமூகவலைதளங்களில் மோடி கருத்து தெரிவிப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்றைய தினம் இந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப் ஆகிய சமூக வலைதள கணக்குகளை விட்டுவிடலாம் என்று யோசிக்கிறேன். உங்கள் அனைவரையும் போஸ்ட் செய்ய வைப்பேன் என தெரிவித்திருந்தார்.

சமூகவலைதளம்
பல்வேறு குழப்பங்களுக்கு தீர்வு கொடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மற்றொரு ட்வீட் போட்டுள்ளார். அதில் இந்த ஆண்டு பெண்கள் தினம் (மார்ச் 8) ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதனால் எனது சமூகவலைதள கணக்குகளை பெண்கள் நிர்வகிக்க அனுமதிக்கிறேன். தனது வாழ்க்கையாலும் பணிகளாலும் பிறருக்கு முன் மாதிரியாக திகழும் பெண்கள் வசம் சமூக வலைத்தள கணக்குகளை ஒப்படைக்க தயாராக உள்ளேன்.

பயன்படுத்துதல்
இது பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும். நீங்கள் பெண்ணா, அல்லது முன்மாதிரியாக திகழும் பெண்களை உங்களுக்கு தெரியுமா? அவ்வாறெனில் அவர்கள் பற்றிய தகவல்களை எங்களுடன் ஷேர் செய்யுங்கள் என கூறி #SheInspiresUs என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டுள்ளார். ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் மேற்கண்ட ஹேஷ்டேக்கை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
|
ட்வீட்
உங்கள் அனுபவங்களை வீடியோவாக ஷூட் செய்து தனது யூடியூப்பில் பதிவேற்றம் செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெண்களின் எண்ணங்களையும் கருத்துகளையும் இந்த உலகிற்கு எடுத்துரைக்க ஒரு வாய்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் மோடி சமூகவலைதளங்களை விட்டு விலக போவதில்லை என்பது தெளிவாக விளங்குகிறது. இதன் மூலம் ஞாயிற்றுக்கிழமை ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலிருந்து விலகவுள்ளதாக நேற்றைய ட்வீட்டின் அர்த்தமும் தற்போது புரிய வருகிறது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications