"நரேந்திர மோடி மீண்டும் முதல்வர் ஆக வேண்டும்.." நிதிஷ்குமார் சொன்னதும்.. அதிர்ந்த பாஜக தலைவர்கள்!
டெல்லி: நரேந்திர மோடி மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதை விருப்பம் என்று என்டிஏ கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார் கூறியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நமது நாட்டில் இப்போது ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், இன்னும் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு மட்டும் நடக்க உள்ளது.

நிதிஷ் குமார்: லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், நாடு முழுக்க பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலமைச்சராக வர விரும்புவதாகக் கூறியுள்ளார். தற்போது நடக்கும் லோக்சபா தேர்தலில் என்டிஏ கூட்டணி 400 இடங்களைக் கைப்பற்றும் என்று கூறிய நிதிஷ்குமார், அடுத்து திடீரென மோடி முதல்வராக வேண்டும் என்று கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியது.
அந்தக் கூட்டத்தில் பேசிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார், "நாங்கள் (என்டிஏ கூட்டணி) நாடு முழுக்க 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்.. மரியாதைக்குரிய நரேந்திர மோடி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும். அப்போதுதான் இந்தியா வளரும், பீகார் வளரும்.. மக்களுக்கு எல்லாமே நல்லதே நடக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
அதிர்ச்சி: மோடி முதல்வராக வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியதைக் கேட்டு மேடையில் இருந்த மற்ற தலைவர்களால் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடனடியாக தனது தவறை உணர்ந்து கொண்ட நிதிஷ் குமார், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகி நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்புவதாகவும் அதையே தான் கூற வந்ததாகவும் சொல்லிச் சமாளித்தார்..
அந்த கூட்டத்தில் மேலும் பேசிய நிதிஷ்குமார், "நரேந்திர மோடி ஏற்கனவே பிரதமராக இருக்கிறார். நாட்டை அவர் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.. இதுவே எங்கள் அனைவருக்கும் தேவை" என்றார்.
முதல்முறை இல்லை: அதேநேரம் நிதிஷ்குமார் இதுபோல உளறிக் கொட்டுவது இது முதல்முறை இல்லை. சமீப காலங்களில் அவர் இதுபோல மாற்றி மாற்றிப் பேசுவது அதிகரித்தே உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பிரச்சார கூட்டத்தில் ராம் விலாஸ் பாஸ்வானுக்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று நிதிஷ் குமார் வாக்கு சேகரித்தார். இதில் விஷயம் என்னவென்றால் ராம் விலாஸ் பாஸ்வான் 2020ஆம் ஆண்டிலேயே உயிரிழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
குழப்பம்: அதேபோல கடந்த மாதம் பிரதமர் மோடி கலந்து கொண்ட பிரச்சார கூட்டத்தில் நிதிஷ்குமார் பேசும் போது, "தேர்தலில் பிரதமர் மோடிக்காகவே பொதுமக்கள் வாக்களிப்பார்கள். இந்தத் தேர்தலில் பாஜக நிச்சயம் 4000 தொகுதிகளில் வெல்லும்" என்றார். அதிலும் 4 லட்சம் எனச் சொல்ல வந்த முதலில் நிதிஷ்குமார், அதன் பிறகே சமாளித்தவாறே 4000 என்று கூறியிருக்கிறார்.. ஆனால், நாட்டில் உள்ள மொத்த நாடாளுமன்றத் தொகுதிகளே வெறும் 543 தொகுதிகள் தான்.
நமது நாட்டில் இதுவரை 486 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்துள்ள நிலையில், மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு வரும் ஜூன் 1ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் முடிந்த உடன் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications