கொரோனா 2-வது அலை.. போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்புங்கள்.. விவசாயிகளுக்கு, மத்திய அரசு வேண்டுகோள்
டெல்லி: கொரோனா 2-வது அலை வீசி வருவதால் டெல்லியில் போராடும் விவசாயிகள், போராட்டத்தை கைவிட்டு வீட்டுக்கு திரும்ப வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் சுமார் 130 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பேசுவார்த்தையில் பயன் இல்லை
கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் நிகழ்ந்த வன்முறை, கடும் குளிர் ஆகியவற்றை தாங்கி பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை.

கொரோனா 2-வது அலை
வேளாண் சட்டத்தை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது. ஆனால் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறினார்கள். தற்போது இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலை வீசி வருகிறது. டெல்லியிலும் தினமும் 7,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

பேச்சுவார்த்தைக்கு தயார்
இந்த நிலையில் கொரோனா 2-வது அலை வீசி வருவதால் டெல்லியில் போராடும் விவசாயிகள், போராட்டத்தை கைவிட்டு வீட்டுக்கு திரும்ப வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார். இது தொடர்பாக நரேந்திர சிங் தோமர் கூறுகையில், ' பல விவசாய சங்கங்கள், பொருளாதார வல்லுநர்கள் விவசாய மசோதாக்களை ஆதரிக்கின்றனர், ஆனால் சில விவசாயிகள் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது, மேலும் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்.

வீட்டுக்கு திரும்பி செல்லுங்கள்
வேளாண் சட்டத்தின் சிக்கலான பகுதிகளைப் பற்றி விவாதிக்க, அவற்றில் மாற்றங்களைச் செய்ய நாங்கள் முன்வந்தோம். விவசாய சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கான காரணமும் கூறவில்லை. கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு குழந்தைகள் மற்றும் வயதானவர்களை வீட்டிற்கு திரும்பிச் செல்லுமாறு விவசாய தொழிற்சங்கத் தலைவர்களை நான் பலமுறை கேட்டுக்கொண்டேன். இப்போது 2-வது அலை தொடங்கியுள்ளது. விவசாயிகள் மற்றும் அவர்களின் தொழிற்சங்கங்கள் கொரோனா நெறிமுறையைப் பின்பற்ற வேண்டும். அவர்கள் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் மற்றும் எங்களுடன் கலந்துரையாட வேண்டும் என்று நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications