வாக்களிப்பதன் அவசியம் பற்றி விழிப்புணர் வு ஏற்படுத்தனும் : மோடி அட்வைஸ்
Subscribe to Oneindia Tamil
புதுடெல்லி : வாக்களிப்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை வாக்காளர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியாவின் தேசிய வாக்காளர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.

மோடி தனது ட்விட்டர் பதிவில், தேசிய வாக்காளர் தினம் என்பது நமது ஜனநாயகக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் தேர்தல்களை சீராக நடத்துவதை உறுதிப்படுத்தவும் தேர்தல் ஆணையத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைப் பாராட்டும் ஒரு சந்தர்ப்பமாகும். வாக்காளர் பதிவை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கான ஒரு நாள் இது, குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் என குறிப்பிட்டுள்ளார்.













Click it and Unblock the Notifications