டெல்லியில் ரூ.27 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்.. சிக்கிய நைஜீரியா கும்பல்!
டெல்லி: டெல்லியில் ரூ.27.4 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் மற்றும் கொக்கைன் போதைப் பொருட்களைக் கைமாற்றிய நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரபல ஹோட்டல் மற்றும் வாடகை குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு (NCB) மற்றும் டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள ஒரு கும்பல் டெல்லியில் இன்று பிடிபட்டது.

ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் தங்கி இருந்த வாடகை குடியிருப்பில் போதைப்பொருள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர், நைஜீரியாவின் செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த 4 ஆப்பிரிக்க நாட்டவர்கள் உட்பட அங்கிருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து எம்.டி.எம்.ஏ போதைப்பொருளைத் தவிர, உயர்தர கிரிஸ்டல் மெத் மற்றும் ஆப்கானிஸ்தான் ஹெராயின் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. முக்கிய போதைப்பொருள் நெட்வொர்க்கை பிடித்ததற்காக போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் டெல்லி காவல்துறையினரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டி உள்ளார்.
"போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிரான எங்கள் இடைவிடாத வேட்டை தொடர்கிறது. மோடி அரசாங்கம் போதைப்பொருட்களுக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொண்டது. டெல்லி-என்சிஆரில் ஒரு பெரிய போதைப்பொருள் நெட்வொர்க்கின் திட்டம் முறியடிக்கப்பட்டது. என்சிபி மற்றும் டெல்லி காவல்துறையினர் அந்தக் கும்பலை கையும் களவுமாகப் பிடித்து ₹27.4 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன், எம்டிஎம்ஏ மற்றும் கோகோயின் ஆகியவற்றை மீட்டு ஐந்து பேரைக் கைது செய்துள்ளனர். இந்த பெரிய நடவடிக்கைக்காக என்சிபி மற்றும் டெல்லி காவல்துறையை நான் பாராட்டுகிறேன்," என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபரில், 560 கிலோ கொக்கைன் மற்றும் 40 கிலோ ஹைட்ரோபோனிக் போதைப்பொருட்கள் டெல்லியின் மஹிபலூர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் இருந்து கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.5,620 கோடி . இது டெல்லியின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கைகளில் ஒன்றாகும். அடுத்த சில நாட்களுக்குப் பிறகு, மற்றொரு போதைப்பொருள் கும்பலிடம் இருந்து ரூ.2,000 கோடி மதிப்புள்ள 200 கிலோ கொக்கைன் மீட்கப்பட்டது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications