சொத்துக்காக மனைவியால் கொல்லப்பட்ட என்.டி.திவாரி மகன்..போலீஸ் அதிரடி நடவடிக்கை..
டெல்லி: உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் என்டி திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கொலை வழக்கில், அவரது மனைவி அபூர்வாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் முதல்வராக இருந்தவர் என்.டி.திவாரி. இவரது மகன் ரோகித் சேகர் திவாரி ஆவார். இவர் அபூர்வா என்பவரை திருமணம் செய்த கொண்டு தனியாக வசித்து வந்தார்.

தனியாக வசித்து வந்தாலும் கணவன் - மனைவி இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாக கூறப்படுகிறது. எனவே இதன் காரணமாக, ஒரே வீட்டில் இருந்தாலும் இருவரும் ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்து வந்துள்ளனர்
இந்நிலையில் ரோகித் சேகர் திவாரி கடந்த வாரம் அவரது வீட்டில் மூக்கில் ரத்தம் வழிந்து மயங்கி விட்டதாக அவரது அம்மா உஜ்வாலாவுக்கு தொலைபேசியில் தகவல் சென்றது. இதையடுத்து ரோகித் சேகரை விரைந்து வந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்
ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் மனைவியிடம் இது குறித்து கேட்ட போது ரோகித் சேகர் மாரடைப்பால் துடித்ததாகவும் பின்னர் மயங்கி விழுந்துவிட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் அவரின் வாக்குமூலத்தில் நம்பிக்கை ஏற்படாததால், ரோகித் சேகரின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
அங்கு நடைபெற்ற பிரேத பரிசோதனையின் முடிவில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ரோகித்தின் கழுத்து நெரிக்கப்பட்டு அதனால் தான் அவர் மூச்சுத்திணறி இறந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டது. இதனால் இந்த மரணம் இயற்கையானது அல்ல என்று மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டதால், கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இதில் ரோகித் சேகரின் மனைவி அபூர்வா மீது சந்தேகம் வலுத்தது.
சொத்துக்காக அவர் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டிருந்தனர். இந்நிலையில் தீவிர விசாரணைக்கு பிறகு ரோகித் சேகர் திவாரி கொலை வழக்கில், அவரது மனைவி அபூர்வாவை போலீஸார் தற்போது கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications