நாடாளுமன்றத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட திமுக எம்பி எம்.எம். அப்துல்லா.. திரிணாமுல் காங்கிரஸ் ஆவேசம்!
டெல்லி: நாடாளுமன்றத்துக்குள் சென்ற திமுக ராஜ்யசபா எம்பி எம்.எம்.அப்துல்லா தொழிலகப் பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நாடாளுமன்ற வளாகம் மோடி, அமித்ஷாவின் தனிப்பட்ட சொத்தா? என இச்சம்பவத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
திமுகவின் ராஜ்யசபா எம்பி எம்.எம்.அப்துல்லா நேற்று நாடாளுமன்றம் சென்றார். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த CISF என்கிற மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினர் எம்.எம்.அப்துல்லா எம்பியை தடுத்து நிறுத்தினர். அத்துடன் என்ன காரணத்துக்காக நாடாளுமன்றத்துக்குள் செல்கிறீர்கள்? என விசாரணை நடத்தி இருக்கின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ராஜ்யசபா தலைவரான துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கு எம்.எம்.அப்துல்லா எம்பி கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், நாடாளுமன்றதுக்கு நேற்று பிற்பகல் 2.40 மணிக்கு தாம் சென்றதாகவும் தம்மை மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். அத்துடன் எதற்காக நாடாளுமன்றம் செல்கிறீர்கள் என விளக்கம் தந்தாக வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தினர். தமிழ்நாட்டு பிரதி ஒருவரிடம் நாடாளுமன்றப் பாதுகாவலர்கள் இப்படி மோசமாக நடந்தது இல்லை. மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினர் பணிக்கு வந்த நிலையில்தான் இந்த மோசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இப்படி மோசமாக நடந்து கொண்ட மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எம்.அப்துல்லா எம்பி தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்கு தனி பாதுகாவலர்கள் இருந்தனர். கடந்த மே மாதம் நாடாளுமன்ற வளாகப் பணியில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். அன்று முதலே ஏம்பிக்களுக்கும் தொழிலகப் பாதுகாப்பு படையினருக்கும் இடையே சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
நாடாளுமன்ற வளாகத்தில் திமுகவின் எம்.எம். அப்துல்ல்லா எம்பி தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்ட சம்பவத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்திய நாடாளுமன்றம் ஒன்றும் மோடி- அமித்ஷாவின் சொந்த சொத்து இல்லை. நாடாளுமன்றத்தின் ராஜ்யசபா உறுப்பினர் நாடாளுமன்றத்துக்குள் செல்வதை ஏன் கேள்வி கேட்க வேண்டும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆவேசமாக கன்டனம் தெரிவித்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications