இனி லீவ் எடுப்பதில் பிரச்சனை இல்லை.. சம்பளமும் போகாது.! மொத்தமாக மாறும் தொழிலாளர் சட்ட ரூல்ஸ்!
டெல்லி: தொழிலாளர்கள் சட்டம் தொடர்பாக மத்திய அரசு முக்கிய அறிவிப்பைச் சமீபத்தில் வெளியிட்டது. அதில் விடுப்பு, ஒவர் டைம், காப்பீடு தொடர்பாக சில முக்கிய பாயிண்டுகள் இருக்கிறது. இந்த புதிய விதிகள் ஏன் முக்கியம்.. இது எந்தளவுக்குத் தொழிலாளர்களுக்கு நன்மையைக் கொடுக்கும் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!
மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை தொழிலாளர் சட்டம் தொடர்பாக மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் வேலை நிலைமைகள், வேலை நேரம், ஊதியத்துடன் கூடிய விடுப்புக்கான தகுதி மற்றும் சுகாதாரப் பலன்களில் பெரிய மாற்றங்கள் வர உள்ளன. இந்த மாற்றங்கள் அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தும். மேலும், இது பல லட்சம் தொழிலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லீவ் எடுப்பதில் சிக்கல் இல்லை
இதுவரை ஊழியர்கள் ஆண்டுக்கு 240 நாட்கள் வேலை செய்தால்.. அதன் பின்னரே ஊதியத்துடன் கூடிய விடுப்புக்குத் தகுதி பெறுவார்கள். ஆனால், புதிய சட்டங்களின் கீழ் 180 நாட்கள் வேலை செய்தாலே ஊதியத்துடன் கூடிய விடுப்புக்குத் தகுதி பெறுவார்கள். அதாவது தொழிலாளர்கள் விரைவாகச் சம்பளத்துடன் கூடிய விடுப்புக்குத் தகுதி பெறுவார்கள். உற்பத்தி, ஜவுளி, சில்லறை வர்த்தகம், கட்டுமானம் போன்ற துறைகளில் இது ஒரு முக்கிய மாற்றமாகும்.
இந்தக் குறைந்த கால வரம்பு மற்றும் புதிய வேலை நேர அமைப்பு ஆகியவை தொழிலாளர்கள் போதுமான ஓய்வையும், புத்துணர்ச்சியையும் பெறுவதை உறுதி செய்கிறது. இது நீண்ட கால நோக்கில் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் என்று அரசு சொல்கிறது.
வேலை நேரம்
தினசரி எட்டு மணி நேரம், வாரம் ஒன்றுக்கு அதிகபட்சம் 48 மணி நேரம் என்ற வழக்கமான உச்சவரம்பு அப்படியே இருக்கும். ஆனால், இந்த நேரங்களை எப்படி அமைப்பது என்பதில் மாற்றம் வருகிறது. வாராந்திர உச்சவரம்பை மீறாத வரை தினசரி வேலை நேரத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைக்கலாம்.
- அதாவது ஒரு தொழிலாளர் தினசரி 12 மணி நேரம் என வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை செய்யலாம்.
- அல்லது தினசரி 9.5 மணி நேரம் என வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை செய்யலாம்.
- அல்லது தினசரி 8 மணி நேரம் என வாரத்திற்கு 6 நாட்கள் வேலை செய்யலாம்.
ஓவர் டைம்
ஓவர் டைம் வேலை செய்யும்போது அதற்கு ஊழியர்களின் ஒப்புதல் தேவை. மேலும், வழக்கமான ஊதியத்தை விட இரண்டு மடங்கு அதிக சம்பவம் தரப்பட வேண்டும். முன்பு ஒரு காலாண்டுக்கு 75 மணி நேரம் மட்டுமே ஓவர்டைம் செய்ய வேண்டும் என்ற உச்சவரம்பு இருந்த நிலையில், இப்போது அந்த உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளே தேவை என்றால் இந்த உச்ச வரம்பை நிர்ணயம் செய்யலாம்.. இதனால் ஊழியர்கள் ஓவர்டைம் மூலம் அதிகம் சம்பாதிக்க முடியும்..
மருத்துவ காப்பீடு
மற்றொரு முக்கிய மாற்றம் மருத்துவக் காப்பீட்டில் வருகிறது. 40 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு ஊழியருக்கும் இனி ஆண்டுதோறும் இலவச மருத்துவப் பரிசோதனை வழங்கப்படும். குறிப்பாக அதிக நேரம் வேலை செய்யும் துறைகள், ஆபத்தான சூழல்களில் வேலை செய்ய வேண்டியவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
இது ஊழியர்களுக்கு மட்டுமின்றி.. தொழில்துறையினருக்கும் கூட பலன் தருவதாக இருக்கும்.. உடல்நலப் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து, சரி செய்வதன் மூலம் நீண்ட கால மருத்துவச் செலவுகளைக் குறைக்க முடியும். மேலும், செயல்திறனையும் அதிகரிக்க முடியும்.
-
HCL IT JOBS: நாளை சென்னையில் இண்டர்வியூ.. அழைக்கும் எச்சிஎல்.. சூப்பர் சான்ஸ் -
IT Jobs: அனுபவம் தேவையில்லை.. டிகிரி முடித்தோருக்கு அடித்த ஜாக்பாட்.. சென்னையிலேயே ஐடி வேலை ரெடி -
அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை.. தமிழக அரசு வெளியிட்ட குட்நியூஸ்.. அரசாணையை கவனித்தீர்களா? -
சென்னையில் ரூ.33 ஆயிரம் சம்பளத்தில் வேலை.. செம சான்ஸ்! யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறையா? பெட்ரோல் நிலையங்களில் குவியும் மக்கள்.. மத்திய அரசு விளக்கம் -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications