Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

55 பாலம், 48 சுரங்கப்பாதை.. மிசோரமில் 8000 கோடியில் பிரம்மாண்டம்.. 1.30 மணி நேரமான 10 மணி நேர பயணம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கடைசி எல்லையில் உள்ள மிசோரம் மாநிலம் 91 சதவீதம் காடுகளை கொண்ட மாநிலம் ஆகும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகருக்கு அடுத்தபடியாக மிசோராம் மாநிலத்திற்கு ரயில் பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. ரூ.8,071 கோடியில் 55 உயரமான பாலங்கள், 48 சுரங்கப்பாதைகளுடன் சவால் நிறைந்த புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியை சாலை வழியாக கடக்க 7 முதல் 10 மணி நேரம் ஆகிவந்தது. இனி வெறும் ஒன்றரை மணி நேரத்தில் போக முடியும். இதில் தமிழ் என்ஜினியர்களின் பணி அளப்பரியது என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா உலகின் வித்தியாசமான பல கலாசாரத்தை பண்பாட்டை கொண்ட மாநிலம் மட்டுமல்ல.. நிலப்பரப்பிலும் மிகவும் வித்தியாசமான பல்வேறு பகுதிகளை கொண்டது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் இமயமலையில் இருக்கின்றன. இமயமலை என்பது காஷ்மீர் தொடங்கி கீழே மிசோரம் , அருணாச்சல பிரதேசம் வரை நீள்கிறது. இதில் வடகிழக்கு மாநிலங்களில் பெரிய அளவில் ரயில் போக்குவரத்து இன்று வரை கிடையாது. குறிப்பாக மலைப்பகுதிகளை கொண்ட மாநிலங்களுக்கு ரயில் பாதைகள் எட்டாத கனவாக இருந்து வந்தன.

New railway line in Mizoram with 55 bridges 48 tunnels at a cost of Rs 8000 crore Tamils achieved

சில்சார் டூ பைராபி

அந்த வகையில் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன போதும் மிசோரம் தலைநகர் ஐஸ்வால் ரயில் போக்குவரத்துடன் இணைக்கப்படாமல் இருந்து வந்தது. மிசோரமின் ஒரு பகுதியான பைராபி வரை மட்டுமே ரயில் போக்குவரத்து இருந்து வந்தது. அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து பைராபி வரையிலான இவ்வழித்தடம் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம்தான் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டிருந்தது.

ஜஸ்வாலை இணைக்க பாதை

இவ்வழித்தடத்தின் ரயில் பாதை சுமார் 103 கிலோமீட்டர் தூரம் ஆகும். ஆனால் பெரும்பாலும் அசாம் மாநில எல்லைக்குள்தான் இவ்வழித்தடம் இருக்கிறது. வெறும் 5 கிலோமீட்டர் தூரத்துக்குத்தான் மிசோரம் மாநிலத்தில் ரயில் பாதை இருந்தது. இந்நிலையில் மிசோரம் மாநிலத்தின் பைராபி முதல் சாய்ராங் இடையே 51.38 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைத்து மிசோரம் மாநிலத்தின் தலைநகரான ஐஸ்வாலை இணைத்து ரெயில் போக்குவரத்து பட்டியலில் அதனை கொண்டுவர கடந்த 1999-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு திட்டமிட்டது. சாய்ராங், மிசோரமின் தலைநகரான ஐஸ்வாலுக்கு மிக அருகில் இருந்த இடம் ஆகும். ஆனால் இந்த திட்டம் கடும் சவால்கள் மற்றும் செலவுகள் காரணமாக செயல்படுத்தப்படாமலேயே கைவிடப்பட்டது.

மோடி எடுத்த முடிவு

பின்னர், 2014-ம் ஆண்டு பிரதமராக மோடி பொறுப்பேற்றவுடன், அதே ஆண்டு நவம்பர் 29-ந்தேதி இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தை அமைப்பதற்கு நடைமுறையில் உள்ள சிக்கல்கள், மலைப்பாதையில் உள்ள பிரச்சினைகளை கடந்து ரயில்பாதை அமைக்க ரயில்வே திட்டமிட்டது.

48 சுரங்கப்பாதைகள்

அதன்படி நிலம் கையகப்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடந்தது. அதன்பின்னர் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்தன. இத்திட்டத்துக்கான 51.38 கிலோ மீட்டர் தூர ரயில் பாதையில், 5 ரயில் நிலையங்கள், 12.48 கிலோ மீட்டர் நீளமுள்ள மலைகளை குடைந்து 48 சுரங்கப்பாதைகள், 55 உயரமான பாலங்கள், 87 சிறிய பாலங்கள், 5 சாலை மேம்பாலங்கள் உருவாக்கப்பட்டன. இதில் ஒரு பாலம் 114 மீட்டர் உயரம் உடையது ஆகும்.

8000 கோடியில் ரெடி

அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், பைராபி-சாய்ராங் ரயில் பாதை தற்போது ரயில் போக்குவரத்துக்கு ரெடியாகிவிட்டது. இத்திட்டத்தின் மூலம் சாய்ராங் ரயில்நிலையம் அற்புதமாக மாறி உள்ளது. ராஜதானி ரயில் சேவைகள் இயக்கப்படும் வகையில் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக ரூ.8,071 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ரயில்பாதை ஐஸ்வாலை அசாமின் சில்சார் நகரத்துடனும், நாட்டின் பிற பகுதிகளையும் இணைத்துள்ளது.

வெறும் ஒன்றரை மணி நேரம்

தற்போது மிசோரம் மாநிலத்தின் பைராபியில் இருந்து சாய்ராங் வரை சாலை வழியாக செல்ல 7 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை ஆகி வருகிறது. கடுமையான மலைப்பகுதி என்பதால்,, பருவ நிலையை பொறுத்து நேரம் மாறுபட்டு வந்தது. ஆனால் தற்போது பயன்பாட்டுக்கு வர இருக்கும் புதிய ரெயில் பாதை மூலம் பைராபி ரெயில் நிலையத்தில் இருந்து சாய்ராங் ரெயில் நிலையத்துக்கு ஒன்றரை மணி நேரத்தில் சென்றுவிட முடியும்.

தமிழ் என்ஜினியர்கள்

இந்த புதிய ரயில் பாதை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 2-வது அல்லது 3-வது வாரத்தில் கொடியசைத்து தொடங்கி வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. மிசோரம் புதிய ரயில் பாதை திட்ட பணியை 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது . இந்த நிறுவனங்களின் சார்பில் தமிழகத்தை சேர்ந்த தொழில்நுட்ப என்ஜினியர்கள் பலர் ஈடுபட்டிருக்கிறார்கள்.. இந்த புதிய ரயில் பாதை திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்ததில் தமிழக என்ஜினியர்களுக்கு பெரும் பங்கு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

எப்படி நடந்தது

ஆண்டுக்கு 4 மாதங்கள் மட்டுமே பணிகள் நடந்து வந்த நிலையில், கட்டுமான பணிகளுக்கான பொருட்கள் அசாமில் இருந்துதான் கொண்டுவர வேண்டி இருந்தது. ஒவ்வொரு இடங்களிலும் நடைபெற்ற பணியின்போது சுமார் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டார்களாம்.. மலைகளுக்கிடையே ரயில் பாதை அமைக்கப்படுவதால், அதற்கான ஆயத்த பணிகளுக்கு சுமார் 200 கிலோமீட்டர் தூரத்துக்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டிருக்கிறதாம்.ஒரே நேரத்தில் ரயில் பாதையும், சாலையும் அமைக்கப்பட்டுள்ளதால், மிசோரம் மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+