கணவர் முன்பு பெண்களிடம் அத்துமீறிய இளைஞர்கள்! ரத்த களரியில் முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்! அடிதடி
டெல்லி: நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் பெரும்பாலான இடங்களில் அமைதியாகவே நடந்து முடிந்தது. ஆனால், ஒரு குடியிருப்பில் அத்துமீறிய இளைஞர்களால் பெரிய அடிதடி நடந்துவிட்டது. இதில் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
2022 நிறைவடைந்து இன்று புத்தாண்டு பிறந்ததை உலகெங்கும் உள்ள மக்கள் கோலாகலமாகக் கொண்டாடினர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பெரியளவில் இல்லை.
ஆனால், வேக்சின் பணிகள் உட்பட பல்வேறு காரணங்களால் இந்தாண்டு கொரோனா கிட்டதட்ட கட்டுக்குள் வந்துவிட்டது. இதனால் இந்தாண்டு புத்தாண்டு நாடு முழுக்க மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

புத்தாண்டு கொண்டாட்டம்
தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் அமைதியாகவே புத்தாண்டு கொண்டாட்டம் இருந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று சென்னை பெருநகர காவல்துறை கூட அறிவித்துள்ளது. அதேநேரம் இந்தியாவில் மற்ற இடங்களில் சில பரபர சூழல்கள் உருவானது. குறிப்பாகக் கர்நாடக தலைநகர் பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எல்லை மீறிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பதற்றம்
அதேபோல தேசிய தலைநகர் பகுதியில் உட்பட நொய்டாவிலும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. அங்கு கவுர் சிட்டி ஃபர்ஸ்ட் அவென்யூ சொசைட்டியில் சார்பில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெளிநபர்கள் சிலர் அத்துமீறி நுழைந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த பெண்களைக் கட்டாயப்படுத்தி செல்பி எடுக்க எடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

அத்துமீறிய இளைஞர்கள்
அந்த குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் தனது நண்பர்களைப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அழைத்திருந்தார். அதன்படி அவர்களும் புத்தாண்டிற்கு வந்துள்ளனர். அங்குக் கொண்டாட்டத்தில் அனைவரும் நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த இரண்டு பெண்களுடன் அவர்கள் வலுக்கட்டாயமாக செல்ஃபி எடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. பெண்கள் மறுத்த போதும் தொடர்ந்து கட்டாயப்படுத்தியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

அடிதடி
இது அப்படியே கைகலப்பாக மாறியது. அந்த பெண்களின் கணவர்களுக்கும் இவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெண்களின் கணவர்களைத் தாக்கியுள்ளனர். இதைப் பார்த்த குடியிருப்பு சங்கத்தினரும் மற்றவர்களும் மோதலை தடுக்க சென்றனர். இருப்பினும், வாக்குவாதம் தொடரவே அவர்களும் சண்டையிடத் தொடங்கினர். இதில் ஒருவருக்குத் தோள்பட்டையில் எலும்பு உடைந்துள்ளது. சண்டையை விலக்க முயன்ற பாதுகாவலர்களும் இதில் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இருவர் கைது
பெரிய போராட்டத்திற்கு பிறகே சண்டை முடிவுக்கு வந்துள்ளது. இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இரண்டு பேரைக் கைது செய்தனர். மேலும், மற்ற குற்றவாளிகளைத் தேடும் நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், இந்த விவகாரம் குறித்து இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
-
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications