Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிர்பயா வழக்கு.. நாளை 4பேரை தூக்கிலிடப்போகும் ஹேங்மேன் பவன் ஜலாத்.. திகார் சிறையில் ஒத்திகை!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நிர்பயா குற்றவாளிக்கு தூக்கு... திகார் சிறையில் ஒத்திகை! | Hangman Pawan to execute the four convict

    டெல்லி: நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கு குற்றவாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற மீரட்டில் இருந்து ஹேங்மேன் பவன் ஜலாத் என்பவர் டெல்லி திகார் சிறைக்கு வந்துள்ளார் அவர் தூக்குதண்டனையை நிறைவேற்றுவதற்காக இன்று மாதிரி ஒத்திகையை நடத்த உள்ளார்.

    மருத்துவ மாணி நிர்பயா டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்து நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்த நிர்பயா சில நாட்களில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

    இந்த வழக்கில் ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஒரு சிறுவன் உள்பட 6 பேரை டெல்லி போலீஸார் அப்போது தேடிபிடித்து கைது செய்தனர்.

     4பேருக்கு மரண தண்டனை

    4பேருக்கு மரண தண்டனை

    இவர்களில் ராம்சிங், டெல்லி திகார் சிறையில் 2013 ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். 2013 ம் ஆண்டு செப்டம்பரில் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த டெல்லி நீதிமன்றம் 18 வயது நிரம்பாத சிறுவன் என்பதால் இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. அதேநேரம் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.

     பிப்1ல் தூக்கு

    பிப்1ல் தூக்கு

    இந்நிலையில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் பிப்ரவரி 1ம் தேதி அதாவது நாளை காலை 6மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என டெல்லி நீதிமன்றம் டத் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

     டம்மி முயற்சி

    டம்மி முயற்சி

    அதன்படி அவர்களை தூக்கிலிடுவதற்காக உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் இருந்து தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் அனுபவம் உள்ள காவலர் பவன் ஜலாத் டெல்லி திகார் சிறைக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். பவன் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான ஒத்திகையை நடத்த உள்ளார்.

     தூக்கிலிட வேண்டும்

    தூக்கிலிட வேண்டும்

    முன்னதாக பவன் ஜலாத், குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும் பணியை செய்ய தான் தயாராக இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் அவருக்கு அந்த பணி கொடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள பவன் குப்தா, இந்த குற்றவாளிகள் தூக்கிலிடப்படும் போது எனக்கும், நிர்பயாவின் பெற்றோருக்கும், நாட்டிலுள்ள அனைவருக்கும் ஒரு பெரிய நிம்மதி கிடைக்கும் . இந்த வகையான மக்கள் தூக்கிலிடப்பட வேண்டும்," என்று கூறினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+