தேர்தலை சந்திக்கும் தமிழகத்துக்கு... ரூ.1.03 லட்சம் கோடியில் சாலை மேம்பாட்டு திட்டங்கள்!
டெல்லி: தமிழ்நாட்டில் ரூ.1.03 லட்சம் கோடியில் சாலை மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுளளது.

2021-22-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். அப்போது அவர் நெடுஞ்சாலை திட்டம் தொடர்பாக கூறியதாவது:-
நாடு முழுவதும் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைப் பணிகள் நடந்து வருகிறது. மார்ச் 2022 க்குள் 8,500 கி.மீ நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்.. 11,000 கி.மீ தேசிய நெடுஞ்சாலை திட்டம் முடிக்கப்படும். தமிழ்நாட்டில் ரூ 1.03 லட்சம் கோடியில் சாலை மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் 3,500 கி.மீ நீளத்துக்கு புதிய சாலைகள் அமைக்கப்படும். மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும்.
மேலும் கேரளாவில் 1100 கிமீ நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும். மேற்கு வங்கத்தில் 675 கிமீ தூரத்திற்கு நெடுஞ்சாலை திட்டங்களும், அசாமில் 1300 கிமீ உயர் வழிகள் சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் கூறினார்.தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ரூ 1.03 லட்சம் கோடியில் சாலை மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications