காலணா முதல் 10 காசு வரை.. தங்கத்தில் அள்ளிவீச தயாராகும் நித்யானந்தா.. பரபரக்கும் அறிவிப்புகள்
டெல்லி: விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் போது கைலாசாவின் கரன்சியாக தங்க நாணயங்கள் வெளியிடப்படும் என நித்தியானந்தா அறிவித்துள்ளார். இந்த கரன்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள 56 இந்து நாடுகளுடன் மட்டுமே வர்த்தகம் செய்வதாகவும் அவர் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பாலியல் புகாரில் சிக்கியுள்ள நித்தியானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகாமல் நாட்டை விட்டே தப்பி சென்றுவிட்டார். அவர் கடைசியாக தனித்தீவான கைலாசாவை உருவாக்கி அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
அந்த நாட்டிற்கான தனிக் கொடி, பாஸ்போர்ட் ஆகியவற்றை உருவாக்கியுள்ள நித்தியானந்தா, அந்த நாட்டில் குடியேற பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொண்டிருந்தார்.

சீரியஸாக இறங்கிய நித்தி
இப்படியாக ஏதோ நித்தியானந்தா காமெடி செய்கிறார் என நினைத்த போது கடந்த வாரம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் எனக்கு கிடைத்த நிதியை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தில் உள்ளேன். கைலாசாவுக்கு ரிசர்வ் வங்கி ஒன்றை தொடங்கியுள்ளேன்.

உள்நாடு
உள்நாட்டுக்கு என ஒரு கரன்சியையும் வெளிநாட்டுக்கு என ஒரு கரன்சியையும் ரெடி செய்துள்ளேன். 300 பக்கம் கொண்ட பொருளாதார கொள்கைகளையும் வகுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் இன்று மேலும் கூறுகையில் கால் காசு முதல் 10 காசு வரையிலான தங்க நாணயங்கள் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படும்.

வர்த்தகம்
இவற்றை தமிழில் பொற்காசுகள் என அழைக்கப்படும். சமஸ்கிருதத்தில் ஸ்வர்ண முத்ரா, புஷ்ப முத்ரா என அழைக்கப்படும். இந்து மதத்தை பின்பற்றும் 56 இந்து நாடுகளுடன் வர்த்தகம் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனிமை
தான் தனியாக கைலாசாவில் குடியேறியபோது என்னை பார்த்து ஏராளமானோர் சிரித்தனர். ஆனால் இன்று கொரோனாவால் உலகமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று. நான் ஒரு தீர்க்கதரிசி என நித்தியானந்தா கடந்த மார்ச் மாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications