பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் குழு கூட்டம்.. முதல்வர் விஜய் பங்கேற்பு! அஜெண்டா என்ன?
டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று 11-வது நிதி ஆயோக் குழு (NITI Aayog Governing Council) கூட்டம் நடைபெறுகிறது. ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள கலாசார மையத்தில் நடைபெறும் இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கின்றனர். நாட்டின் வளர்ச்சி திட்டங்கள், பொருளாதார முன்னேற்றம், மத்திய-மாநில ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பாக முக்கிய விவாதங்கள் நடைபெற உள்ளன.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் குழு கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் பங்கேற்கிறார்கள். தமிழகத்தின் சார்பாக முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளார்.

இந்தக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள். நிதி ஆயோக் கூட்டத்தில் மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள், திட்டங்களுக்கான நிதி தேவைகள் உள்ளிட்ட முக்கிய நிதி சார்ந்த பிரச்சினைகள் பற்றி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவது மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.
கேரள முதல்வர் வி.டி. சதீசன், தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார் உள்ளிட்ட தென் மாநில முதல்வர்களும் பங்கேற்கிறார்கள். "வளர்ந்த இந்தியா 2047" என்ற இலக்கை மையமாக கொண்டு, உற்பத்தித் திறன் மிக்க வேலைவாய்ப்பு, தொழில்முனைவு மற்றும் அதிகாரப் பரவலுடன் கூடிய வளர்ச்சி, சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வு உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்படும் எனத்தெரிகிறது.
அதேபோல, நல்லாட்சிமுறை, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு, கூட்டாண்மைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களைப் பயன்படுத்தி செயல்திட்டத்தை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்படும். குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்டகால இலக்குகளின் முன்னேற்றத்தை கண்காணிப்பதற்கான கட்டமைக்கப்பட்ட முறையையும் உருவாக்கி, பொறுப்புணர்வையும் அளவிடக்கூடிய விளைவுகளையும் உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தப்படும்.
அனைவரையும் உள்ளடக்கிய மனித மேம்பாடு தொடர்பான தேசிய இலக்குகளுடன் மாநிலங்களின் வளர்ச்சி நோக்கங்களை ஒருங்கிணைப்பதே இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் சமத்துவமான மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கிய ஒருங்கிணைந்த, கூட்டுறவு அடிப்படையிலான அணுகுமுறை மேலும் வலுப்பெறும் எனவும் நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications