தப்பி ஓடிய நித்தி- அகதியாக ஐநாவில் கெஞ்சல்- பாஜக மீது கொலைசதி புகார்- அதிமுக, திமுக மீதும் பாய்ச்சல்
Recommended Video
டெல்லி: இந்தியாவில் 10 ஆண்டுகளில் தம்மை 100 முறை கொலை செய்ய பாஜக, ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி), பஜ்ரங்தள் ஆகியவை முயற்சித்ததாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திடம் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா புகார் அளித்திருப்பதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
பலாத்கார வழக்குகள், பெண்குழந்தைகள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்படுகிற சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா. கடந்த ஆண்டே போலி பாஸ்போர்ட் மூலம் நேபாளம் வழியாக வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்.
தற்போது தென் அமெரிக்காவில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கி கைலாசா என்கிற தனிநாட்டை பிரகடனம் செய்திருக்கிறார். அத்துடன் இந்திய அரசு மீதும் இந்திய அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மீதும் ஐநாவில் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்திருக்கிறார் நித்தியானந்தா.

கொலை முயற்சிகள்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திடம் கொடுத்த மனுவில் இந்தியாவில் தம்மை 10 ஆண்டுகளில் 100 முறை கொல்ல முயற்சி நடந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார் நித்தியானந்தா. ஐநா மனித உரிமைகள் ஆணையத்திடம் நித்தியானந்தா கொடுத்த மனுவில் இடம்பெற்றுள்ள விவரம்:

பாஜக, ஆர்.எஸ்.எஸ். மீது புகார்
மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனகர்த்தவாக இருக்கிறேன். இந்து ஆதிசைவ சிறுபான்மை சமூகத்தின் ஆன்மீகத் தலைவராகவும் இருக்கிறேன். 2010-ம் ஆண்டு முதல் 2014 வஐ பாஜக, ஆர்.எஸ்.எஸ். தூண்டுதல்களில் எங்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

ஆண்மை சோதனை
கர்நாடகா முதல்வராக சதானந்தா கவுடா பதவி வகித்த போது பிடதி ஆசிரமம் தீக்கிரையாக்கப்பட்டது. பலாத்கார வழக்குகள் தொடரப்பட்டு ஆண்மை பரிசோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்தனர்.

விதம் விதமான கொலை முயற்சிகள்
10 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட முறை இந்துத்துவா தீவிரவாதிகள் என்னை கொல்ல முயற்சித்தனர். ஒருமுறை உணவில் விஷம் கலந்து கொடுத்தனர். பின்னர் கற்களை வீசியும் கொல்ல முயற்சித்தனர். காரை விபத்துக்குள்ளாக்கி கொலை செய்ய திட்டமிட்டனர்.

உயிர்தப்பிய நிகழ்வு
2018-ம் ஆண்டு ஜூனில் ஆசிரமத்துக்குள் முகமூடி கொலையாளிகள் நுழைந்து கொல்ல முயன்றனர். அப்போது கழிவறைக்குள் ஓடி பதுங்கி தாழ்ப்பாள் போட்டு உயிர் தப்பினேன்.

யார் யார் சதிகாரர்கள்?
எங்களை அழிக்க பாஜக, ஆர்,எஸ்,எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகியவை முயற்சித்தன. தமிழகத்தில் அதிமுக, திமுக, பெரியார் தி.க. சிபிஐ, இஸ்லாமிய கிறிஸ்தவ அமைப்புகள் அவதூறுகளையும் வன்முறைகளையும் ஏற்படுத்தினர்.

மொழி தீவிரவாதிகள்
கர்நாடகாவின் ரட்சண வேதிகே என்ற மொழி தீவிரவாத அமைப்பும் வன்முறையை எங்களுக்கு எதிராக நடத்தின. எங்களது இந்து ஆதி சைவ சிறுபான்மை சமூகத்தில் 3 கோடி பேர் இருக்கிறோம்.

அகதி அங்கீகாரம்
எங்களால் தற்போது இந்தியாவுக்கு திரும்ப முடியாது. ஆகையால் எங்களது கைலாசா தனிநாட்டை அங்கீகரித்து அகதி அந்தஸ்து அளிக்க வேண்டுகிறோம். இவ்வாறு நித்தியானந்தா மனுவில் கூறியுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications