சிறப்பு விருந்தினர் இல்லாமல் நடைபெறும் குடியரசு தின விழா.. பார்வையாளர்களுக்கும் கட்டுப்பாடுகள்
டெல்லி: குடியரசு தின விழாவில் இந்த ஆண்டு சிறப்பு விருந்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை. அது போல் அணிவகுப்பு மரியாதைகளும் மிக குறைந்த நேரமே இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தினவிழா வரும் ஜனவரி 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வதாக இருந்தது.

ஆனால் பிரிட்டனில் உருமாறிய கொரோனா பாதிப்பு பணிகளை கவனிக்க வேண்டியிருப்பதால் அவர் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் குடியரசு தினவிழா இந்த ஆண்டு சிறப்பு விருந்தினர்கள் இல்லாமலேயே கொண்டாடப்படுகிறது.
அது போல் ராஜபாதையில் பார்வையாளர்களுக்கும் அனுமதி குறைந்த அளவிலேயே வழங்கப்பட்டுள்ளது. என்னதான் கட்டுப்பாடுகள் இருந்தாலும் அணிவகுப்பு மரியாதையின் பாரம்பரிய குணம் மாறாமல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணிவகுப்பில் வங்கதேச ராணுவ படையினர் கலந்து கொள்கிறார்கள். விஜய் சவுக்கிலிருந்து தொடங்குகிறது அணிவகுப்பு. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் 8.2 கிலோ மீட்டர் தூரம் செல்லும் அணிவகுப்பு மரியாதை இந்த முறை வெறும் 3.3 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லவுள்ளது.
ஆண்டுதோறும் 1.3 லட்சம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இந்த ஆண்டோ 25 ஆயிரம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவகிறார்கள். அது போல் இணை நோய் உள்ள வயது முதிர்ந்தவர்களும் 15 வயதுக்குள்பட்ட குழந்தைகளும் பங்கேற்ற அனுமதி இல்லை.
1966 ஆம் ஆண்டு சிறப்பு விருந்தினர் இல்லாமலேயே குடியரசு தின விழா நடைபெற்றது. அப்போது பிரதமராக இருந்த லால் பகதூர் காலமானதால் இந்திரா காந்தி அப்பதவியை ஏற்றுக் கொண்டார்.
அது போல் 1952 ஆம் ஆண்டு மற்றும் 1953 ஆம் ஆண்டுகளிலும் சிறப்பு விருந்தினர் இல்லை. அது போல் இந்த ஆண்டும் சிறப்பு விருந்தினர் இல்லாமலேயே குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா குறைந்த நேரத்தில் நடைபெறுகிறது.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications