Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சிரித்து கொண்டே ஏதாவது சொன்னால் குற்றமில்லை.." வெறுப்பு பேச்சு வழக்கில் டெல்லி ஐகோர்ட் பரபர கருத்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு எதிரான வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றம் முக்கிய கருத்து தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு எதிராக வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சந்திர தாரி சிங் விசாரித்து வந்தார்.

இந்த வழக்கின் விசாரணையில் தான் வெறுப்பு பேச்சு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

 டெல்லி கலவரம்

டெல்லி கலவரம்

கடந்த 2020 வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்திற்கு முன்பு வெறுப்பைப் பரப்பும் வகையில் பேசியதாக அனுராக் தாக்கூர் மற்றும் பர்வேஷ் வர்மா மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இந்த கருத்து தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் சிஏஏவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் சமயத்தில் பேசிய அமைச்சர் அனுராக் தாக்கூர், போராட்டக்காரர்களுக்கு எதிராகச் செயல்படுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

 மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர்

அமைச்சரின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் கடந்த 2020 ஜனவரி 29ஆம் தேதி அனுராக் தாக்கூருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரத்தில் தான் அனுராக் தாக்கூர் மீது வெறுப்பு பேச்சுக்காக எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு மனுதாரர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது தான் வெறுப்பு பேச்சு தொடர்பாக நீதிமன்றம் முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.

 நீதிபதி கருத்து

நீதிபதி கருத்து

இந்த வழக்கு விசாரணையில் நீதிபதி சந்திர தாரி சிங் , "நீங்கள் புன்னகையுடன் ஏதாவது பேசுகிறீர்கள் என்றால், அது குற்றம் இல்லை. அதேநேரம் மற்றவர்களைப் புண்படுத்தும் வகையில் ஏதாவது பேசினால், நிச்சயமாக அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் சார்ந்த பேச்சுகள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்வதற்கு முன் ஒரு சமநிலையை நாம் வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

 போராட்டம்

போராட்டம்

அப்போது தான் நீதிபதி சந்திர தாரி சிங், "தேர்தல் நேரத்தில் பேசப்படும் பேச்சுக்கும் மற்ற நேரங்களில் பேசப்படும் பேச்சுக்கும் வித்தியாசம் உள்ளது. ஏனென்றால் தேர்தல் நேரத்தைப் பேச்சும் பேச்சுகளை வழக்கமான பேச்சாக எடுத்துக் கொள்ள முடியாது. அதேநேரம் சாதாரண நேரத்தில் அதேபோல பேசுகிறீர்கள் என்றால் அதன் மூலம் எதையோ செய்ய விரும்புகிறீர்கள் என அர்த்தம்.

 தேர்தல் நேரங்கள்

தேர்தல் நேரங்கள்

தேர்தல் சமயத்தில் அரசியல்வாதிகள் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொள்ளும்படி பேசிக் கொள்வது இயல்பானது. அது தவறானது தான் என்றாலும், அதில் இருக்கும் குற்றத்தன்மையைப் பார்க்க வேண்டும்" என்றார். இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், டெல்லியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சிஏஏ போராட்டங்களின் போது, அமைச்சர் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

 நோக்கம்

நோக்கம்

மேலும், குறிப்பிட்ட சமூகத்தைக் குறி வைத்து அவர் பேசியுள்ளதாகவும் வாதிட்டனர். அதற்கு நீதிபதி, ''இந்தப் பேச்சில் வகுப்புவாத நோக்கம் எங்கே இருக்கிறது?'' என்று கேட்டார். மேலும், போராட்டக்காரர்கள் அனைவரும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காட்டும் வகையில் ஏதும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்தி வைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+