புல்வாமா சோகம் எதிரொலி.. இனி காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு சாலை பயணம் கிடையாது.. விமானம்தான்
டெல்லி: புல்வாமா தாக்குதலை அடுத்து துணை ராணுவத்தினர் தரைவழி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு அவர்கள் இனி விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற இடத்தில் கடந்த வியாழக்கிழமை தீவிரவாதி ஒருவர் நடத்திய தற்கொலை படைத் தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர்.
இவர்கள் 70 -க்கும் மேற்பட்ட வாகனங்களில் 2500 வீரர்கள் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது.

350 கிலோ
நாட்டுக்கே பாதுகாப்பு அளிக்கும் ராணுவ வீரர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானதாக பலியான வீரர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் 350 கிலோ வெடிப்பொருளை தீவிரவாதி வழியில் உள்ள சோதனை சாவடிகளை கடந்து உள்ளே வந்தது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பாகிஸ்தான்
இது போல் வீரர்கள் கொத்து கொத்தாக பலியாவதும் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளை கவலைக் கொள்ள வைக்கிறது. தற்போது உலக நாடுகளின் கோபம் பாகிஸ்தான் பக்கம் திரும்பியுள்ளது.

டெல்லி- ஸ்ரீநகர்
இந்த நிலையில் துணை ராணுவ படையினர் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கும் டெல்லியிலிருந்து ஸ்ரீநகருக்கும் செல்லும் போது தரை வழி கான்வாய் வாகனங்களை பயன்படுத்துவதில் மத்திய அரசு மாற்றங்களை செய்துள்ளது.

7.80 லட்சம்
அதன்படி துணை ராணுவத்தினர் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல விமானங்களை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் 7.80 லட்சம் துணை ராணுவத்தினர் விமானத்தில் பயணிப்பர். காவலர் நிலையிலிருந்து உதவி ஆய்வாளர் நிலையானவர்கள் வரை விமானத்தில் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

விமானத்தில்
காவலர் முதல் உதவி ஆய்வாளர் நிலையிலுள்ள துணை ராணுவத்தினர் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். விடுப்பில் செல்லும் போது பணிக்கு திரும்பும்போது அவர்கள் விமானத்தில் பயணிக்கலாம். விமானம் செல்ல முடியாத இடங்களில் பேருந்து, பாதுகாப்பான வாகனங்களில் அவர்கள் செல்ல வழிவகை செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications