TikTok: இந்தியாவில் டிக்டாக் செயலி மீதான தடை நீக்கப்படுமா? - மத்திய அமைச்சர் சொன்ன பதில்!
டெல்லி: டிக்டாக் செயலி மீதான தடையை விலக்கக்கோரி எந்த பரிந்துரையும் அரசின் வசம் இல்லை என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலி மீண்டும் வரப்போவதாக அண்மைக்காலமாக தகவல்கள் பரவி வரும் நிலையில், மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கொள்கை காரணமாக டிக்டாக் உள்ளிட்ட பல சீன ஆப்களை இந்தியா தடை செய்தது. அப்போது இந்தியா சீனா இடையே மோதல் போக்கு ஏற்பட்டிருந்த நிலையில், மத்திய அரசால் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. தடை செய்யப்படுவதற்கு முன்பு, இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடி பேர் டிக்டாக் செயலியை பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக டிக்டாக் செயலி மீதான தடை விலக்கப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது. டிக்டாக் செயலியின் தலைமை நிறுவனமான பைட் டான்ஸ், குருகிராமில் உள்ள அலுவலகத்தில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகளை வெளியிட்டதால், இந்தியாவில் மீண்டும் டிக்டாக் செயலி பயன்பாட்டுக்கு வருமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போது வரை, இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாத நிலையே உள்ளது.
சமீபத்தில் சீன அதிபர் ஜின் பிங்கை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி சீனா சென்றார். அங்கு சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அமெரிக்கா இந்தியா மீது அதிக வரி விதித்ததால் இரு நாடுகளுக்கு இடையே உரசல் ஏற்பட்டுள்ள நிலையில், சீனா - இந்தியா மீண்டும் நெருங்கி வருவதாக கருதப்பட்டது.
இந்த பின்னணியில் தான், இந்தியாவில் டிக்டாக் செயலி மீண்டும் பயன்பாட்டுக்கு வரப்போவதாக தகவல் பரவியது. பைட் டான்ஸ் நிறுவனம் குருகிராமில் ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது இந்த தகவலுக்கு வலு சேர்த்தது. இந்நிலையில், இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முன்னணி செய்தி தளத்துக்கு அளித்த பேட்டியில், டிக் டாக் சமூக ஊடகச் செயலியை மீண்டும் புதுப்பிக்கும் திட்டம் அதாவது, இந்தியாவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அரசுக்கு எந்த பரிந்துரையும் வரவில்லை. டிக்டாக் தடையை நீக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications