பிரதமர் மோடியுடன் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு
Recommended Video
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி இன்று சந்தித்து பேசினார்.
2019-ம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்கா வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டூஃப்ளோ, மைக்கேல் கிரேம் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. அபிஜித் பானர்ஜி, மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை விமர்சிக்கிறார் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்தியா வருகை தந்த அபிஜித் பானர்ஜி டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பு தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அபிஜித் பானர்ஜி நோபல் பரிசு பெற்றதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது.
அவருடனான இச்சந்திப்பு ஆரோக்கியமானதாக இருந்தது. மனித குல முன்னேற்றத்தின் மீதான அவரது ஆர்வம் புரிந்து கொள்ள முடிந்தது என பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.
#WATCH Delhi: Nobel Laureate Abhijit Banerjee met Prime Minister Narendra Modi, today. pic.twitter.com/5kC9AP2wZu
— ANI (@ANI) October 22, 2019
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை அபிஜித் பானர்ஜி சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது அவர் கூறியதாவது: இந்தியாவின் நலன் குறித்து தாம் எப்படி சிந்திக்கிறேன என பிரதமர் மோடி கூறினார்.
அவருக்கு சில கொள்கைகள் இருக்கின்றன. சிந்தனை இருக்கிறது. அவரது அணுகுமுறை வித்தியாசமான ஒன்றாக இருக்கிறது. அதேநேரத்தில் மோடியின் ஆட்சி மீது பூசப்படும் வண்ணங்களால் ஒருவித அவநம்பிக்கையும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
மக்களின் பார்வையை புரிந்து கொள்ளுதல் என்கிற யதார்த்தம் அவசியமானது . அதுதான் ஆக்கப்பூர்வமான அரசாங்கம் செயல்படுவதற்கு சரியானதாக இருக்கும். இவ்வாறு அபிஜித் பானர்ஜி தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications