ஒடிசா ரயில் விபத்து.. உயிரிழந்தோர் யார்! புகைப்படங்களை வெளியிட்ட ரயில்வே துறை! எங்கு பார்க்கலாம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தோரை அடையாளம் காணும் வகையில் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் மிக மோசமான ஒரு ரயில் விபத்து இப்போது அரங்கேறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நமது நாட்டில் இல்லாத வகையில் மிக மோசான விபத்தாக இது கருதப்படுகிறது.

Odisha accident Pictures of deceased and injured in railway website

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் (12841) தினசரி மேற்கு வங்கம் கொல்கத்தாவில் நேற்று மாலை 3.20 மணிக்கு வழக்கம் போல இருந்து புறப்பட்டது. இந்த ரயிலில் வழக்கம் போலவே கூட்டம் அதிகமாகவே இருந்ததாகக் கூறப்படுகிறது. இது ஒடிசா, ஆந்திரா வழியாக மறுநாள் சென்னை வந்தடையும்.

விபத்து: நேற்று மாலை இந்த ரயில் மாலை பாலசோர் மாவட்டத்தில் பாஹாநாகா பஜார் என்ற ரயில் நிலையம் அருகே வந்த போது விபத்தில் சிக்கியுள்ளது. அது சரக்கு ரயில் மீது மோதியதே விபத்திற்குக் காரணம் எனத் தெரிகிறது. இதில் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது அங்கே 20 நிமிடங்கள் கழித்து வந்த யஸ்வந்த்பூர்-ஹவுரா ரயிலும் தடம் புரண்டு கிடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெட்டிகள் மீது மோதியது.

இப்படி மூன்று ரயில்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில பிரச்சினைகள் இருந்த நிலையில், அதையும் தாண்டி மீட்புப் பணிகள் நடைபெற்றன. சுமார் 50க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

புகைப்படங்கள் வெளியீடு: இதுவரை இந்த விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல 800க்கும் மேற்பட்டோர் அருகே இருந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சுமார் 56 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு ஒடிசாவில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தோரை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே உயிரிழந்தவர்களை உறவினர்கள் எளிதாக அடையாளம் காட்ட முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது உயிரிழந்தவர்கள் புகைப்படங்கள் http://ser.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இதில் உயிரிழந்தோரின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சென்ற பயணிகளின் உறவினர்கள், இந்தத் தளத்தில் சென்று தேவையான தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி நடந்தது: இதுவரை இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. இருப்பினும், நேற்றிரவு 7 மணியளவில் கோரமண்டல் எக்ஸ்பிரசுக்கு பச்சை சிக்னல் கொடுத்து உடனடியாக ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்குள் ரயில் வந்துவிடவே அது மெயின் டிராக்கில் செல்லாமல் லூப் டிராக்கில் வந்துள்ளது. அங்கே இருந்த சரக்கு ரயிலில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியுள்ளது. கோரமண்டல் எக்ஸ்பிரஸின் என்ஜின் சரக்கு ரயிலுக்கு மேலே உள்ளது இதையே காட்டுகிறது.

இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் சுமார் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. அதில் சில பெட்டிகள் பக்கத்தில் இருந்த தண்டவாளத்திலும் விழுந்துள்ளன. அப்போதே அங்கே வந்த மற்றொரு ரயிலான யஸ்வந்த்பூர்-ஹவுரா ரயில் இந்தப் பெட்டிகளில் மோத அதுவும் தடம் புரண்டதாகக் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+