ஓமிக்ரான் பாதிப்பு- டெல்லிக்கு மஞ்சள் எச்சரிக்கை- அமலுக்கு வரும் அதிரடி கட்டுப்பாடுகள்!
டெல்லி: ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் டெல்லியில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஹோட்டல்கள், பார்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி; பள்ளி, கல்லூரிகள் திரையரங்குகள் மூடப்படும் எனவும் டெல்லி அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்துள்ளதால் திங்கட்கிழமை இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்:
இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு
கடைகள், மால்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
50% வாடிக்கையாளர்களுடன் மட்டும் உணவகங்கள் இயங்க வேண்டும்
உணவகங்கள் காலை 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் இயங்கும்.
மதுபான பார்களில் 50% வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும்
மதுபான பார்கள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் இயங்க அனுமதி
ஹோட்டல்கள் திறந்திருந்தாலும் கருத்தரங்குகள் நடத்த அனுமதி இல்லை
டெல்லி மெட்ரோ ரயில்கள் 50% பயணிகளுடன் மட்டும் இயங்கும்
ஆட்டோக்கள், டாக்ஸிகளில் 2 பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும்
சலூன்கள், அழகுநிலையில் திறந்து இருக்கும்
திருமணம் மற்றும் இறுதி சடங்குகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி
தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி
டெல்லியில் எவையெல்லாம் மூடப்படும்?
திரையரங்குகள், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மூடப்படும்
ஆடிட்டோரியங்கள் மூடப்படும்
ஸ்பா, ஜிம்கள், யோகா மையங்கள், பொழுது போக்கு பூங்காக்கள் மூடப்படும்
பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்கள் மூடப்படும்.












Click it and Unblock the Notifications