ஐ.ஐ.டி. நிறுவனங்களில் 12% இடஒதுக்கீடு மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது- மத்திய அரசு அதிர்ச்சி தகவல்
டெல்லி: நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் முதன்மையான ஐ.ஐ.டி.களில் 40% பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு லோக்சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் பணி நியமனங்கள் குறித்து லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் அளித்த பதிலின் முக்கிய அம்சங்கள்:
23 ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் மொத்தம் 6,511 பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர். மேலும் 4,370 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இடஒதுக்கீடு என்ன?
மத்திய அரசு கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27%; உயர் ஜாதி ஏழைகளுக்கு 10%; தலித்துகளுக்கு 16.6%; பழங்குடியினருக்கு 7% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

12% இடஒதுக்கீடு
இந்த இடஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 59.5% பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஐ.ஐ.டிகளில் 12% இடஒதுக்கீடு மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை நிலவரம்
உதாரணமாக மும்பை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் 3.8% பணியிடங்கள்தான் இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பட்டிருக்கிறது. ஆனால் ஆதிக்க ஜாதியினருக்கு 96% இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இதேபோல் 6.5%தான் இடஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கிறது.

சென்னை ஐஐடி
சென்னை ஐ.ஐ.டி.யில் 88% இடங்கள் ஆதிக்க ஜாதியினருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உயர் கல்வி நிறுவனங்களில் காலி இடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு ரமேஷ் பொக்ரியால் கூறினார்.
-
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக.. எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்!











Click it and Unblock the Notifications