நோ ‛கேஷ்’.. டிசம்பரில் யுபிஐ மூலம் மட்டுமே பணப்பரிவர்த்தனை செய்யணும்.. பிரதமர் மோடி அழைப்பு.. ஏன்?
டெல்லி: அடுத்த மாதம் (டிசம்பர்) முழுவதும் பணம் கொடுப்பதற்கு பதில் யுபிஐ பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதன் அனுபவங்களை தன்னுடன் பகிர்ந்து கொள்ளவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 2014 முதல் ‛மான் கீ பாத்’ (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் நாட்டின் வளர்ச்சி பற்றி பேசும் பிரதமர் மோடி சேவைகளில் ஈடுபடும் நபர்களை பாராட்டியும் வருகிறார். இந்நிலையில் தான் மான் கீ பாத்தின் 107 வது நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி உரையாற்றினார்.
இந்த வேளையில் அவர் டிஜிட்டல் இந்தியா குறித்தும் யூபிஐ பணப்பரிவர்த்தனை பற்றியும் பேசினார். அப்போது வரும் டிசம்பர் மாதம் முழுவதும் யூபிஐ மூலம் பணபரிவர்த்தனை செய்ய பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:
கழிவறை கழுவி ஏழை குழந்தைகளுக்கு உதவி.. கோவை லோகநாதனை மான் கீ பாத்தில் பாராட்டிய மோடி! யார் இவர்?
இந்தியாவில் யுபிஐ மூலம் நடக்கும் பணபரிவர்த்தனை என்பது கடந்த மாதங்களில் அதிகரித்துள்ளது. இது வரும் மாதத்தில் அதிகரிக்க வேண்டும். இதனால் வரும் (டிசம்பர்) மாதம் முழுவதும் அனைத்து பணப்பரிவர்த்தனைகளுக்கும் யூபிஐ-யை பயன்படுத்த வேண்டும். அதில் கிடைக்கும் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
‛166 பேர் பலி’’.. 15 ஆண்டுக்கு முன் மும்பை 26/11 தாக்குதல் நடந்தது எப்படி? கலங்கிய பிரதமர் மோடி
மேலும் தொடர்ந்து 2வது முறையாக தீபாவளியின்போது மக்கள் கைகளில் பணம் வைத்து செலவழிப்பதை குறைத்து யுபிஐ பணபரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளனர். இதன்மூலம் மக்கள் தற்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை அதிகளவில் நம்பி இருப்பது உறுதியாகி உள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் பரிவர்த்தனைகளுக்கு ஒரு மாதம் முழுவதும் யூபிஐ தவிர வேறு எதையும் பயன்படுத்த மாட்டோம் என்று இந்த உறுதிமொழியை எடுக்க வேண்டும்’’ என்றார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications