Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆபரேஷன் சிந்தூர் விவாதம்.. லோக்சபாவில் ஆவேசத்துடன் பேசிய ஆ ராசா.. பாஜக எம்.பிக்கள் கொடுத்த ரியாக்‌ஷன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபாவில் இன்று ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்பி ஆராசா, மத்திய அரசை கடுமையாக சாடினார். இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறியது வெட்ககேடு என்று ஆ. ராசா கூறினார். ஆ. ராசா பேசும் போது இடையிடையே பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கத்தி கூச்சல் போட்டனர்.

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் லோக்சபாவில் உரையாற்றினர்.

operation-sindoor-debate-dmk-mp-a-raja-spoke-in-the-lok-sabha-reaction-from-bjp-mps

லோக்சபாவில் ஆ ராசா பேச்சு

எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் பதில் அளித்தனர். இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அதேபோல், எதிர்க்கட்சி எம்பிக்களும் இந்த விவாதத்தில் பேசினர். திமுக எம்.பி ஆ ராசா இன்று உரையாற்றும் போது ஆவேசத்துடன் பேசினார். ஆ. ராசா கூறியதாவது:-

எப்போது பார்த்தாலும் நேரு, இந்திரா காந்தி மீதுதான் தவறு என பழி போடுகிறாரக்ள். 370 பிரிவை கொண்டு வந்த பிறகு காஷ்மீரில் துப்பாக்கி சத்தம் இருக்காது எனக் கூறினர். இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் கூறியது வெட்க கேடு. குறைந்தபட்சம் உங்கள் தலைவர் வாஜ்பாயின் வழிமுறைகளாவது பின்பற்றுங்கள்.

வாஜ்பாயையாவது பின்பற்றுங்கள்

வாஜ்பாய் பிரதமராக இருந்த போது கந்தகார் கடத்தல் சம்பவம் நடைபெற்றது. போரை நிறுத்தியதாக அமெரிக்கா கூறியது வெட்க கேடு. பாகிஸ்தான் தாக்க போவதாக அமெரிக்க துணை அதிபர் கூறியது வெட்க கேடான விஷயம். இந்திய உளவுத்துறை என்ன செய்து கொண்டு இருக்கிறது. பஹல்காம் தாக்குதல் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது. கார்கில் போருக்கு பிறகு வாஜ்பாய் கமிஷன் ஒன்றை அமைத்தார். அந்த கமிஷனின் அறிக்கை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் அதே பாரம்பரியத்தை பின்பற்றுவதாக கூறும் நீங்கள் அனைத்தையும் மறைக்கிறீர்கள். நீங்கள் ஜனநாயகத்துடன் நடந்து கொள்கிறீர்களா? குறைந்தபட்சம் உங்கள் தலைவர் வாஜ்பாயையாவது பின்பற்றுங்கள். கார்கில் போருக்கு பின் வாஜ்பாய் செய்தது போல நீங்கள் இப்போது செய்ய வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் குறித்து முரண்பட்ட செய்திகள் வெளியகியிருந்தன. ஆபரேஷன் சிந்துர் குறித்தும் இப்போதும் முரண்பட்ட செய்திகளை கூறுகிறீர்கள்.

மூலக்காரணம் காங்கிரஸ் தான்

ஜனநாயக முறையை பின்பற்றி அனைத்தையும் வெளிப்படையாக விவாதியுங்கள்" என்றார். ஆ. ராசா பேசும் போது இடையிடையே பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கத்தி கூச்சல் போட்டனர். எனினும் அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் ஆ ராசா எம்பி ஆவேசத்துடன் பேச்சை தொடர்ந்தார்.

முன்னதாக பேசிய அமித்ஷா, "பாகிஸ்தானில் உள்ள அனைத்து பயங்கரவாதத்திற்கும் மூலக்காரணம் காங்கிரஸ் தான். காங்கிரஸ் மட்டும் பிரிவினையை ஏற்காமல் இருந்து இருந்தால், பாகிஸ்தான் என்ற ஒரு நாடே இருந்து இருக்காது. கடந்த 2002 ஆம் ஆண்டு அடல் ஆட்சியின் போது தான் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான், பயங்கரவாத தடுப்பு சட்டத்தை கொண்டு வந்தது" என்று பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+