‛‛எங்களையும் சஸ்பெண்ட் செய்யுங்க’’.. ‛‛வாண்டடா’’ வந்த எதிர்க்கட்சி எம்பிக்கள்! பிரகலாத் ஜோஷி பகீர்
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த 146 எம்பிக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில் தான் எம்பிக்களே தானாக வந்து சஸ்பெண்ட் செய்யும்படி தன்னிடம் கோரிக்கை வைத்ததாக நாடாளுமன்ற விவகாரத்துறை துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார்.
கடந்த 13ம் தேதி வழக்கம்போல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வந்தது. அப்போது லோக்சபாவின் பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 பேர் திடீரென்று அரங்குக்குள் குதித்தனர். மேலும் ஸ்பிரே மற்றும் வண்ண புகையை வெளியேற்றும் குண்டுகளை வீசினர்.

இந்த வழக்கில் தற்போது 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே தான் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் லோக்சபா, ராஜ்யபசாவில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்களின் தொடர்ந்து வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதையடுத்து சபையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி இரு சபைகளிலும் எம்பிக்கள் அடுத்தடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த 146 எம்பிக்கள் மொத்தமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில் லோக்சபாவில் இருந்து 100 பேரும், ராஜ்யசபாவில் இருந்து 46 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற வரலாற்றில் ஒரே கூட்டத்தொடரில் 146 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். இதனை எதிர்த்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இன்று கூட நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. இந்நிலையில் தான் நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது பற்றி நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷி இன்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் இருந்து எம்பிக்களை சஸ்பெண்ட் செய்ய நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் அவர்களிடம் அமைதியாக இருக்கும்படி கோரிக்கை வைத்தோம். அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து சில எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த பிற எம்பிக்கள் எங்களையும் சஸ்பெண்ட் செய்யுங்கள் என்ற கோரிக்கையுடன் வந்தனர்.
சபையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியபோதும் நாங்களும் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும், எங்களையும் சஸ்பெண்ட் செய்ய வண்டும் எனவும் கூறினார்கள். காங்கிரஸ் கட்சி செயல்பாடு என்பது இப்படித்தான் இருக்கிறது” என தெரிவித்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications