இபிஎஸ்-ஸை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது- தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு மனு
டெல்லி: அண்ணா திமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் பெங்களூர் புகழேந்தி மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதிமுகவின் 2022-ம் ஆண்டு ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியது. இதனடிப்படையில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லும். இதனால் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார்.

அத்துடன் அதிமுக பொதுச்செயலாளர் பதவி, ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை அதிமுகவின் திருத்தப்பட்ட சட்ட விதிகளாக அங்கீகரிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடமும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இதன் மீது தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்காததால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி புருசந்திரா குமார் கவுரவ் விசாரித்தார்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, கர்நாடகா தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ளது. அதனால் அதிமுகவின் மாற்றங்களை சட்டவிதிகளை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் ஒப்புதல் தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி, அதிமுக தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
ஆனால் தேர்தல் ஆணையமோ, இந்த பிரச்சனையில் நிலைமைகளை கவனித்து வருகிறோம். எடப்பாடி பழனிசாமி தரப்பின் கோரிக்கை தொடர்பாக முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் தேவை என தெரிவிக்கப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் ஆட்சேபனை தெரிவித்தது. அத்துடன் 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இதே பதிலைத்தான் தேர்தல் ஆணையம் கூறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரோ, அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான மூல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதனால் இந்த வழக்கை விசாரிக்க கூடாது என வாதிட்டார். இதனையடுத்து தேர்தல் ஆணையம், இந்த பிரச்சனையில் 10 நாட்களில் முடிவெடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பில் பெங்களூர் புகழேந்தி, தேர்தல் ஆணையத்தில் இன்று ஒரு மனு கொடுத்தார். அதில், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதிமுகவின் செயற்குழு, கர்நாடகா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக சார்பான வழக்குகள் சிந்துபாத் கதை போல ஒரு முடிவுக்கு வராமல் இழுபறியாய் நீடித்து கொண்டே இருக்கிறது.
-
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்?












Click it and Unblock the Notifications