எல்லையில் சீனாவுடனான மோதல்- நாடாளுமன்றத்தில் தெரிவிக்காதது ஏன்? மத்திய அரசுக்கு ஓவைசி சரமாரி கேள்வி
டெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் சீனாவுடனான மோதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு ஏன் தெரிவிக்கவில்லை என மஜ்லிஸ் கட்சித் தலைவரான ஓவைசி எம்.பி. சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
வடகிழக்கு எல்லை மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தை சீனா தமது நாட்டின் அங்கம் என உரிமை கோரி வருகிறது. இதற்கு இந்தியா கடுமையாக எதிர்ப்பும் மறுப்பும் தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் தவாங் செக்டாரில் கடந்த 9-ந் தேதியன்று சீன ராணுவ வீரர்களுக்கும் நமது ராணுவத்தினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. தவாங் செக்டரில் சீன ராணுவம் ஊடுருவ முயற்சித்ததால் இந்த மோதல் வெடித்தது. சீன ராணுவத்தினர் மீது கடும் தாக்குதல் நடத்தி ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்திருக்கிறது. இந்த மோதலில் இருதரப்பிலும் காயம் ஏற்பட்டது என்றும் பின்னர் இரு நாட்டு வீரர்களும் தங்களது பகுதிகளுக்கு திரும்பிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அருணாச்சல பிரதேச எல்லையில் சீனாவின் இந்த ஊடுருவல் மற்றும் தாக்குதல் முயற்சி நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி கூறுகையில், இனியும் இந்தியா பொறுத்துக் கொண்டிருக்க வேண்டிய தேவை இல்லை; இனி சீனாவிடம் நாம் கடுமையாக நடந்துதான் ஆக வேண்டும் என தெரிவித்துள்ளது.
மஜ்லிஸ் கட்சி எம்.பி. ஓவைசியோ மத்திய பாஜக அரசுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், நாடாளுமன்றம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் சீனாவின் தாக்குதல், ஊடுருவல் தொடர்பாக ஏன் தெரிவிக்கவில்லை? நாட்டையே இருளில் வைத்திருக்கிறதா பாஜக அரசு? இந்திய வீரர்களது நிலைதான் என்ன? கல்வான் தாக்குதல் போல நடந்ததா? என பல கேள்விகளை எழுப்பி உள்ளார். அத்துடன் இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் தர உள்ளதாகவும் ஓவைசி தெரிவித்துள்ளார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications