எல்லையில் சீனாவுடனான மோதல்- நாடாளுமன்றத்தில் தெரிவிக்காதது ஏன்? மத்திய அரசுக்கு ஓவைசி சரமாரி கேள்வி
டெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் சீனாவுடனான மோதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு ஏன் தெரிவிக்கவில்லை என மஜ்லிஸ் கட்சித் தலைவரான ஓவைசி எம்.பி. சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
வடகிழக்கு எல்லை மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தை சீனா தமது நாட்டின் அங்கம் என உரிமை கோரி வருகிறது. இதற்கு இந்தியா கடுமையாக எதிர்ப்பும் மறுப்பும் தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் தவாங் செக்டாரில் கடந்த 9-ந் தேதியன்று சீன ராணுவ வீரர்களுக்கும் நமது ராணுவத்தினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. தவாங் செக்டரில் சீன ராணுவம் ஊடுருவ முயற்சித்ததால் இந்த மோதல் வெடித்தது. சீன ராணுவத்தினர் மீது கடும் தாக்குதல் நடத்தி ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்திருக்கிறது. இந்த மோதலில் இருதரப்பிலும் காயம் ஏற்பட்டது என்றும் பின்னர் இரு நாட்டு வீரர்களும் தங்களது பகுதிகளுக்கு திரும்பிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அருணாச்சல பிரதேச எல்லையில் சீனாவின் இந்த ஊடுருவல் மற்றும் தாக்குதல் முயற்சி நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி கூறுகையில், இனியும் இந்தியா பொறுத்துக் கொண்டிருக்க வேண்டிய தேவை இல்லை; இனி சீனாவிடம் நாம் கடுமையாக நடந்துதான் ஆக வேண்டும் என தெரிவித்துள்ளது.
மஜ்லிஸ் கட்சி எம்.பி. ஓவைசியோ மத்திய பாஜக அரசுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், நாடாளுமன்றம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் சீனாவின் தாக்குதல், ஊடுருவல் தொடர்பாக ஏன் தெரிவிக்கவில்லை? நாட்டையே இருளில் வைத்திருக்கிறதா பாஜக அரசு? இந்திய வீரர்களது நிலைதான் என்ன? கல்வான் தாக்குதல் போல நடந்ததா? என பல கேள்விகளை எழுப்பி உள்ளார். அத்துடன் இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் தர உள்ளதாகவும் ஓவைசி தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications