சீனா ஆக்கிரமிப்பு- உண்டு, இல்லை என ஏன் மோடி அரசால் பதில் சொல்ல முடியவில்லை? வெளுக்கும் ப.சி.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய நிலப்பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு உண்டு- இல்லை என ஏன் மோடி அரசால் பதில் சொல்ல முடியவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சீனா விவகாரத்தில் தொடர்ந்து மத்திய அரசை கடுமையாக சாடி வருகிறார் ப.சிதம்பரம். மோடியின் 5 ஆண்டு கால சீனா ஊடுருவல்கள் குறித்து தற்போதைய பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்க முடியுமா? என பாஜக தலைவர் ஜேபி நட்டாவை கேள்வி கேட்டிருந்தார் ப.சிதம்பரம்.

P Chidambaram questions Centre on China incursions

சீனா ஊடுருவல் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்த கருத்துகளை ஜேபி நட்டா விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த சிதம்பரம் கேள்விகளை எழுப்பியிருந்தார். மேலும் ப. சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

P Chidambaram questions Centre on China incursions

சீன துருப்புகள் இந்திய எல்லையைத் தாண்டி ஊடுருவியிருக்கிறார்களா, இந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்திருக்கிறார்களா என்று கேட்டால் அரசு தரப்பில் சீறுகிறார்கள், ஏன்? ஆஹா, இது தேசத் துரோகம் என்று குதிக்கிறார்கள், ஏன்?

P Chidambaram questions Centre on China incursions

2004-2014 ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியின் போது இதே கேள்விகளை பாஜக பல முறை கேட்டார்களே, மறந்துவிட்டதா? ஐ மு கூட்டணியின் சீனா கொள்கையைக் கடுமையாக விமர்சித்தார்களே, அதுவும் மறந்துவிட்டதா?

P Chidambaram questions Centre on China incursions

ஒவ்வொரு முறையும் நாங்கள் பதில் சொன்னோம். ஊடுருவல் முயற்சி நடந்தது, ஆனால் முறியடிக்கப்பட்டது, 2004-2014 இல் இந்திய நிலப்பகுதியில் சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பதில் சொன்னோம். உண்டு, இல்லை என்று திரு மோடி அரசால் ஏன் பதில் சொல்ல முடியவில்லை?

இவ்வாறு சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+