நாடு முழுக்க குழந்தைகளுக்கு ரத்த சோகை அதிகரிப்பு.. சாப்பாடு இல்லாததுதான் காரணம்- ப.சிதம்பரம் தாக்கு
டெல்லி: பணவீக்கத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்கிறாரே நாட்டில் ரத்தசோகை அதிகரிப்பிற்கு ஒரே காரணம் போதிய உணவின்மைதான் என முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ப சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், 6 மாத குழந்தை முதல் 5 வயது குழந்தை வரை ரத்தசோகையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதாவது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரத்தசோகை பாதித்த குழந்தைகளின் எண்ணிக்கை 58.6 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 67.1 சதவீதமாக உயர்ந்துள்ளது என்கிறார். அமைச்சர் சொல்வது போல் ரத்த சோகைக்கு ஒரே ஒரு காரணம் என்ன தெரியுமா போதிய உணவின்மைதான்.

மத்திய நிதியமைச்சர்
ஆனால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோ பணவீக்கம் எந்த மக்களையும் பாதிக்கவில்லை என்கிறார். மக்கள் குறிப்பாக குழந்தைகள் விலைவாசி உயர்வால் குறைந்த அளவு உணவையே எடுத்துக் கொள்கிறார்கள் என ப சிதம்பரம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர்
டெல்லியில் நேற்று குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பேரணியாக செல்ல முயன்ற காங்கிரஸ் எம்பிக்கள் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரமும் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் கூறுகையில் மத்திய அரசுக்கு செவியே கிடையாது. செவி இருந்தால்தானே சாய்க்க முடியும்.

அழுவதா சிரிப்பதா
மக்கள் துன்பப்படுகிறார்கள் என்பதையே அரசு மறுக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு மக்களவை பேசிய நிதித்துறை அமைச்சர் ஜிஎஸ்டி உயர்வால் மக்கள் பாதிக்கப்படவில்லை என்கிறார். இப்படி சொல்வதைப் பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. மக்கள் பாதிக்கப்படவில்லையா?

நிதித் துறை அமைச்சர்
நிதி துறை அமைச்சர் வரலாறு பேசுகிறாரே தவிர பொருளாதாரத்தை பற்றி பேசவில்லை. ஒருவேளை அவர் வரலாற்று ஆசிரியராக இருந்திருக்க வேண்டும். நிதி அமைச்சராக இருக்க முடியாது. வேலைவாய்ப்பின்மை, உணவின்மை உள்ளிட்டவைகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள. இதை பார்த்துவிட்டு மக்கள் பாதிக்கப்படவில்லை என்று சொன்னால் என்ன செய்வது? நாங்கள் போராடத்தான் வேண்டும் என்று அவர் கூறினார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications