என் மகன் பண்ற பிஸினஸுக்கு என்னை ஏன் விசாரிக்கிறீங்க?.. பாய்ந்த ப.சிதம்பரம்
டெல்லி: இந்தியாவிலுள்ள அரசியல் தந்தைகள் தங்கள் குடும்பத்திடம் அதிகம் சென்டிமென்ட் வயப்பட்டவர்கள். ஆயிரம் கரடுமுரடுத்தனம் இருந்தாலும் கூட தன் வாரிசுகளின் நல்வாழ்க்கைக்காக எதையும் செய்ய தயங்காத மனிதர்கள் இவர்கள். அதிலும் தமிழகத்தை சேர்ந்த அரசியல் தந்தைகளின் வாரிசு பாசத்தையும், அதனால் உருவாகும் பஞ்சாயத்துகளையும் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்.
ப.சிதம்பரமும் அப்படியொரு தந்தையாகவே பார்க்கப்படுகிறார். விசாரணையின் துவக்க நிலையில் சிதம்பரம் 'இல்லை, தெரியாது, ஞாபகம் இல்லை' என்று பதில் தெரிவித்தாராம். என்ன இருந்தாலும் பெரும் அரசியல் ஆளுமை, முன்னாள் மத்திய நிதியமைச்சர், உள்துறை அமைச்சர், மூத்த வழக்கறிஞர்! எம்.பி., எனவே அவருக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும் எனும் அடிப்படையில் மிக மரியாதையாகவே டீல் செய்துள்ளனர். ஆனால் அவர் ஒரு கேள்விக்கும் தெளிவான பதிலை தரவில்லை.

அதன் பின் கார்த்தி சிதம்பரம் தொடர்பான கேள்விகளையும், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சிதம்பரம் சில முடிவுகளை எடுத்து அதன் மூலம் பெரும் லாபம் பார்த்தது! போன்றவற்றையும் கேட்பதற்கு சி.பி.ஐ.யின் ஹைலெவல் பாடியே வந்தமர்ந்துவிட்டதாம். கூடவே அமலாக்கத்துறை அதிகாரிகளும் வந்தமர்ந்திருக்கிறார்கள்.
சரியான தூக்கம் இல்லாதது, வயது மூப்பு ஆகியன ஆனானப்பட்ட சிதம்பரத்தை அசைத்துவிட்டது. இதனால் இந்த ஹைலெவல் டீமின் கிடுக்கிப்பிடி விசாரணையின் போது அதீத களைப்பால் தடுமாறியவர் ஒரு கட்டத்தில் 'ப்ளீஸ் தூங்க விடுங்க!' என்று கூறும் மன நிலைக்கு வந்து, அது மறுக்கப்பட்டதும் ஏக எரிச்சலாகி இருக்கிறார்.
இந்த நிமிடத்தில் கார்த்தியின் பிஸ்னஸில் இந்திராணி முகர்ஜி சம்பந்தப்பட்ட விஷயங்கள் பற்றி கேட்டபோது 'யார் இந்திராணி?' என்று எரிச்சலாகி இருக்கிறார். அடுத்த கேள்வியில் கார்த்தியின் பிஸ்னஸின் உள் விஷயங்களை அள்ளிப்போட்டதும் "என்னோட பையன் மேரேஜ் முடிஞ்சதும் தனியா தொழில் பண்ணப்போயிட்டார். அவர் பிஸினஸ் பத்தி அவர்ட்டதான் கேட்கணும்! என்னை ஏன் இதுல சம்பந்தப்படுத்துறீங்க?' என்று பாய்ந்து விட்டாராம் விசாரணை டீம் மீது.
உடனே சட்டென்று அவர்கள் 'தேங்க்யூ, நீங்க சொல்றதும் சரிதான். உங்க மகனையே விசாரிக்கிறோம். அதுவும் உங்க கண்ணு முன்னாடி.' என்றபடி எழுந்திருக்க, அதிர்ச்சியில் உறைந்தாராம் ப.சிதம்பரம்.
- ஜி.தாமிரா.
-
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
இதென்ன லிஸ்ட்.. வேலைக்கு ஆகாது.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை.. விட்டு வீசிய ராகுல் காந்தி -
தீராத "கேரளா" தலைவலி.. வென்றாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது! என்ன செய்ய போகிறார் ராகுல்? -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
கன்னியாகுமரியில் கடன் தந்த வங்கிக்கு ட்விஸ்ட் தந்த காங்கிரஸ் பெண் பிரமுகர்.. பாய்ந்த வழக்கு -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications