Padma Vibhushan: கேரளாவை குறிவைக்கும் பாஜக? விருது அறிவிக்கப்பட்ட 5 பேரில் மூவர் கேரளத்தை சேர்ந்தவர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குடியரசுத் தினத்தை ஒட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது பத்ம விபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. விருது பெற்ற 5 பேரில் 3 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள முன்னாள் முதல்வரும், மறைந்த மார்க்சிஸ்ட் கட்சி தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன், பிரபல பாலிவுட் நடிகர் மறைந்த தர்மேந்திரா, கேரளாவை சேர்ந்த கே.டி. தாமஸ், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த என்.ராஜம், கேரளாவை சேர்ந்த நாராயணனுக்கும் பத்ம விபூஷன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விரைவில் கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது விருது அறிவிக்கப்பட்ட 5 பேரில் 3 பேர் கேரளத்தை சேர்ந்தவர்களாக இருப்பது, அம்மாநிலத்தை பாஜக குறி வைக்கிறதோ? என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications